யோகி வெற்றி பெற்றது மோடிக்கு அதிருப்தியாம்!

யோகி வெற்றி பெற்றது மோடிக்கு அதிருப்தி என்றெல்லாம் உருட்டுகிறார்கள். ஏனென்றால் மோடிக்கு மாற்றாக நாளை பிரதமராகிவிடுவாராம் யோகி..😄

உண்மையில் அப்படி நடந்தால் முதலில் மகிழ்பவர் மோடிதான்..அதை மனதில் வைத்து,தனக்கு பிறகு பல தலைவர்கள் பாஜகவை வழிநடத்த வேண்டும் என்ற ஒரே காரணத்தால்தான் நேரடியாக ஆர்எஸ்எஸ்காரர்களை முதல்வராக கொண்டு வருகிறார் நரேந்திர மோடி.பட்னவிஸ் – கட்டார் எல்லோரும் ஒரு உதாரணமே.

இந்தியாவின் ஹிருதய பகுதியில்,ஒரு அடர்காவி அரசியல் பேசும் மடாதிபதியை இந்த அளவுக்கு உயர்த்திப்பிடித்து,அவர் மேல் வளர்ச்சி அரசியலை நிலைநிறுத்தி நாயக பிம்பம் தருவதே,நாளைய ‘ஹிந்து ஹிருதய் சாம்ராட்’ யோகி என்பதை அறிவுறுத்தவே..

இன்று பாஜக தொண்டர்களிடம் ஒரு ‘திரிசூல’ மனநிலை நிலை நின்றுள்ளது,அது ‘மோடி – அமித்ஷா – யோகி’ என்பதாக..இவர்கள் மூவரையும்தான் தங்கள் ஆதர்ஷ புருஷராக எடுத்துக் கொள்கிறார்கள்..

யோகியை வருங்கால பிரதமர் என சொல்வது இயல்பானது,அது அவருடைய உழைப்பிற்கான அங்கீகாரம் என உள்துறை அமைச்சர் அமித்ஷாவே சொன்னார்.அதுமட்டுமல்ல,2024 ல் மோடி ஆட்சி மீண்டும் அமைய 2022 ல் யோகியின் ஆட்சி உ.பியில் அமைய வேண்டும்.ஏனென்றால்,டெல்லிக்கு செல்லும் பாதை லக்னோ வழியாக என்றார்.

ஆக,யோகி வருங்கால பிரதமர் என்பது மக்களுடைய விருப்பம்,எப்படி 2009 லேயே அடுத்த பிரதமராக மோடிதான் வர வேண்டும் என்று மக்கள் பேச ஆரம்பித்தார்களோ அதே போல இப்போது யோகியை பற்றி பேசுகிறார்கள்..

அடல்பிஹாரி வாஜ்பாயின் ரத்த உறவில் வந்த சகோதரன் அல்ல லால் கிருஷ்ண அத்வானி,அத்வானியின் மகனல்ல நரேந்திர தாமோதரதாஸ் மோடி,மோடியின் உடன்பிறந்த சகோதரன் அல்ல யோகி..

இங்கே வாஜ்பாயை அத்வானியும்,அத்வானியை மோடியும்,மோடியை யோகியும்,யோகியை பட்னவிஸும்,ஒருநாள் பட்னவிஸை அண்ணாமலையும் வந்து மாற்றுவார்கள்,அந்த இடத்தை நிரப்புவார்கள்..இது தொடரும்.

காரணம் ஒன்றுதான்,பாஜக குடும்ப கட்சியோ அல்லது மொழி – இன – ஜாதியை தூக்கிப் பிடிக்கும் கட்சியோ இல்லை.பாரதத்தின் ஆன்மாவை காப்பவன் யாரோ? அதன் பெருமையை நிலைநிறுத்துபவன் யாரோ அவர்களை காலமே கொண்டு போய் அங்கே வைக்கும்..

ஜனங்களின் ஆட்சியில்,அவர்களால் தரப்பட்ட செங்கோலை உயர்த்திப் பிடிக்கும் மன்னன் அரியணை ஏறுவான்.இதெல்லாம் காலம் காலமாக ஒரு குடும்பத்துக்கு மட்டுமே சாமரம் வீசுகிற கும்பலுக்கு புரியாது.

அந்த கும்பல் தங்கள் தாழ்வுமனப்பான்மை மற்றும் பொறாமையை சரி செய்வதாக நினைத்து,மோடிக்கு யோகி போட்டி என தீயாய் எரியும் தங்கள் வயிற்றில்,மேலும் மேலும் திராவகத்தை ஊற்றிக் கொள்கிறார்கள்.மோடி – யோகி – ஷா என அனைவருமே தேசவிரோதிகளுக்குத்தான் எதிரி..

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

முதல்வர் மருந்தகம் இல்ல… ‘ம ...

முதல்வர் மருந்தகம் இல்ல… ‘முதல்வர் மாவகம்’ ; அண்ணாமலை விமர்சனம் முதல்வர் மருந்தகங்களில் மாவு விற்கப்படும் நிலையில், இதற்குப் பேசாமல், ...

பேட்ச் வொர்க் செய்த கட்டடத்தை த ...

பேட்ச் வொர்க் செய்த கட்டடத்தை திறந்த முதல்வர்; அண்ணாமலை குற்றச்சாட்டு அவசர அவசரமாக பேட்ச் வொர்க் செய்த கட்டடத்தை முதல்வர் ...

விரத மாலை அணிந்தார் நயினார் நாக ...

விரத மாலை அணிந்தார் நயினார் நாகேந்திரன் மதுரையில் நாளை மறுநாள் நடக்கும் முருகன் மாநாடு சிறப்பாக ...

காவல்துறையினர் பதவி உயர்விலும ...

காவல்துறையினர் பதவி உயர்விலும் ஏமாற்று வித்தை: தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம் திமுகவின் ஏமாற்று வித்தை, காவல்துறையினர் பதவி உயர்விலும் தொடர்வதாக ...

குடும்பத்தில் மட்டுமே வளர்ச்ச ...

குடும்பத்தில் மட்டுமே வளர்ச்சி -பிரதமர் மோடி சொந்த குடும்பத்தில் மட்டும் வளர்ச்சியுள்ளதாக ஆர்ஜேடி - காங்கிரஸ் ...

ஜி7 நாட்டு தலைவர்களுக்கு பிரதமர ...

ஜி7 நாட்டு தலைவர்களுக்கு பிரதமர் மோடி வழங்கிய பரிசுப் பொருட்கள் ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, கனடா, பிரான்ஸ், ...

மருத்துவ செய்திகள்

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...