யோகி வெற்றி பெற்றது மோடிக்கு அதிருப்தியாம்!

யோகி வெற்றி பெற்றது மோடிக்கு அதிருப்தி என்றெல்லாம் உருட்டுகிறார்கள். ஏனென்றால் மோடிக்கு மாற்றாக நாளை பிரதமராகிவிடுவாராம் யோகி..😄

உண்மையில் அப்படி நடந்தால் முதலில் மகிழ்பவர் மோடிதான்..அதை மனதில் வைத்து,தனக்கு பிறகு பல தலைவர்கள் பாஜகவை வழிநடத்த வேண்டும் என்ற ஒரே காரணத்தால்தான் நேரடியாக ஆர்எஸ்எஸ்காரர்களை முதல்வராக கொண்டு வருகிறார் நரேந்திர மோடி.பட்னவிஸ் – கட்டார் எல்லோரும் ஒரு உதாரணமே.

இந்தியாவின் ஹிருதய பகுதியில்,ஒரு அடர்காவி அரசியல் பேசும் மடாதிபதியை இந்த அளவுக்கு உயர்த்திப்பிடித்து,அவர் மேல் வளர்ச்சி அரசியலை நிலைநிறுத்தி நாயக பிம்பம் தருவதே,நாளைய ‘ஹிந்து ஹிருதய் சாம்ராட்’ யோகி என்பதை அறிவுறுத்தவே..

இன்று பாஜக தொண்டர்களிடம் ஒரு ‘திரிசூல’ மனநிலை நிலை நின்றுள்ளது,அது ‘மோடி – அமித்ஷா – யோகி’ என்பதாக..இவர்கள் மூவரையும்தான் தங்கள் ஆதர்ஷ புருஷராக எடுத்துக் கொள்கிறார்கள்..

யோகியை வருங்கால பிரதமர் என சொல்வது இயல்பானது,அது அவருடைய உழைப்பிற்கான அங்கீகாரம் என உள்துறை அமைச்சர் அமித்ஷாவே சொன்னார்.அதுமட்டுமல்ல,2024 ல் மோடி ஆட்சி மீண்டும் அமைய 2022 ல் யோகியின் ஆட்சி உ.பியில் அமைய வேண்டும்.ஏனென்றால்,டெல்லிக்கு செல்லும் பாதை லக்னோ வழியாக என்றார்.

ஆக,யோகி வருங்கால பிரதமர் என்பது மக்களுடைய விருப்பம்,எப்படி 2009 லேயே அடுத்த பிரதமராக மோடிதான் வர வேண்டும் என்று மக்கள் பேச ஆரம்பித்தார்களோ அதே போல இப்போது யோகியை பற்றி பேசுகிறார்கள்..

அடல்பிஹாரி வாஜ்பாயின் ரத்த உறவில் வந்த சகோதரன் அல்ல லால் கிருஷ்ண அத்வானி,அத்வானியின் மகனல்ல நரேந்திர தாமோதரதாஸ் மோடி,மோடியின் உடன்பிறந்த சகோதரன் அல்ல யோகி..

இங்கே வாஜ்பாயை அத்வானியும்,அத்வானியை மோடியும்,மோடியை யோகியும்,யோகியை பட்னவிஸும்,ஒருநாள் பட்னவிஸை அண்ணாமலையும் வந்து மாற்றுவார்கள்,அந்த இடத்தை நிரப்புவார்கள்..இது தொடரும்.

காரணம் ஒன்றுதான்,பாஜக குடும்ப கட்சியோ அல்லது மொழி – இன – ஜாதியை தூக்கிப் பிடிக்கும் கட்சியோ இல்லை.பாரதத்தின் ஆன்மாவை காப்பவன் யாரோ? அதன் பெருமையை நிலைநிறுத்துபவன் யாரோ அவர்களை காலமே கொண்டு போய் அங்கே வைக்கும்..

ஜனங்களின் ஆட்சியில்,அவர்களால் தரப்பட்ட செங்கோலை உயர்த்திப் பிடிக்கும் மன்னன் அரியணை ஏறுவான்.இதெல்லாம் காலம் காலமாக ஒரு குடும்பத்துக்கு மட்டுமே சாமரம் வீசுகிற கும்பலுக்கு புரியாது.

அந்த கும்பல் தங்கள் தாழ்வுமனப்பான்மை மற்றும் பொறாமையை சரி செய்வதாக நினைத்து,மோடிக்கு யோகி போட்டி என தீயாய் எரியும் தங்கள் வயிற்றில்,மேலும் மேலும் திராவகத்தை ஊற்றிக் கொள்கிறார்கள்.மோடி – யோகி – ஷா என அனைவருமே தேசவிரோதிகளுக்குத்தான் எதிரி..

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...