பாஜக மீது நம்பிக்கை துளிர்விட ஆரம்பித்திருக்கிறது

தமிழகத்தில் மூன்று தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் வந்திருக்கின்றன. எப்போதும் போல ஆளும்கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். இந்நேரத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு எனது நன்றியையும், தேர்தல் பணியாற்றிய நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், பிரச்சாரத்தில் ஈடுபட்ட தலைவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மூன்று தொகுதிகளிலும் நாங்கள் எதிர்பார்த்த வாக்குகள் இல்லை என்றாலும், மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறோம். ஒவ்வொரு வாக்கும் மணி மணியான வாக்கு. “MONEY” இல்லாத வாக்கு, நாங்கள் பெற்ற அத்தனையும் உண்மையாக பெற்ற வாக்குகளே தவிர, வாங்கிய வாக்கு கிடையாது. அது மட்டுமல்ல, பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழகத்தில் அங்கீகாரம் ஆரம்பித்து விட்டது என்பதை ஆரவாரம் இல்லாமல் சொல்லும் வாக்கு. இந்த இடைத்தேர்தலில் களமிறங்க வேண்டுமென்று எந்த கட்டாயமும் இல்லை என்ற நிலையிலும், தேர்தல் முறையாக நடைபெறாது என்ற காரணங்களுக்காக பல கட்சிகள் தேர்தலை புறக்கணிக்கும் முடிவு எடுத்தாலும், களங்கங்களுக்கு முடிவு கட்ட வேண்டுமென்றால் களத்தில் இருந்தே ஆக வேண்டும் என்ற உறுதியான முடிவை எடுப்பதற்கு உறுதுணையாக நின்றனர் அத்தனை பாரதிய ஜனதா கட்சி தமிழக தலைவர்களும். ஆக இந்த களத்தை எதிர்கொண்டு இன்று சிறிய அளவிலாவது மக்களிடம் எங்களுக்கு அங்கீகாரம் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. இன்று பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழக அரசியலில் நம்பிக்கை துளிர்விட ஆரம்பித்திருக்கிறது என்பதும், மக்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் மீது நம்பிக்கை துளிர்விட ஆரம்பித்திருக்கிறது என்பதையும் இந்த தேர்தல் உணர்த்துகிறது.


ஆக இன்று தளராமல் தளிர்நடை போடும் பாரதிய ஜனதா கட்சி நாளை தடைகளை தகர்த்து, தடம் பதிக்கும் நிலை தமிழகத்தில் உருவாகும் என்பது உறுதி. ஆக தமிழகத்தில் மாற்று சக்தியாக உருவாக பாரதிய ஜனதா கட்சிக்கு தகுதி இருக்கிறது என்பதையே இத்தொகுதி நிலவரங்கள் உணர்த்தியிருக்கின்றன. வாக்களித்த நல்ல உள்ளங்களுக்கு எனது மனம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

என்றும் மக்கள் பணியில்

(Dr. தமிழிசை சௌந்தரராஜன்)

பாஜக மாநில தலைவர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...