தமிழகத்தில் மீனவர்கள் பிரச்னை குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும்

தமிழகத்தில் மீனவர்கள் பிரச்னை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் என பாரதிய ஜனதா தேசிய செயலாளர் முரளிதர்ராவ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து சென்னையில் முரளிதர்ராவ் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசியதாவது : இந்தியாவில் ஜவுளி, விவசாயம், மீன்பிடித்தல் ஆகியவை முக்கிய தொழிலாகும். இந்தியாவில் சுமார் 8 ஆயிரம் கிலோ மீட்டார் . நீளத்துக்கு கடற்கரையும், சுமார் 3,200 மீனவ கிராமங்களும் இருக்கின்றன . 2 கோடி மக்கலின் வாழ்க்கை மீன்பிடி தொழிலை நம்பியுள்ளது . இத் தொழில் மூலம் அரசுக்கு 36 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கிறது. வெளி-நாடுகளுக்கு 8 ஆயிரம்கோடி அளவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மீன்பிடித்தல் இப்போது பல சவால்களை சந்தித்து வருகிறது. சுனாமிக்குப் பிறகு ஏற்பட்டுள்ள பருவ-நிலை மாற்றதின் காரணமாக மீனவர்கள் அடிக்கடி கடலுக்கு செல்ல இயலவில்லை.

இது-போன்ற மீனவர் பிரச்னைகளை நேரில் அறிவதற்காக பாரதிய ஜனதா நிர்வாகிகள் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக விழுப்புரம், ராமநாதபுரம், புதுச்சேரியில் இருக்கும் சில மீனவர் கிராமங்களுக்கு நேரில் சென்று நான் மீனவர்களின் பிரச்னைகளை கேட்டறிந்தேன். தமிழகத்தில் மீனவர்கள் அதிகமாக பாதிக்க பட்டுள்ளனர். மண்ணெண்ணெய், டீசல், படகு, வலை ஆகியவற்றின் விலை உயர்வு அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. கடந்த 2 நாள்களாக மீனவர்களுக்கு வருமானமே இல்லை. ஜல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் மீனவர் கிராமங்களில் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. இலங்கை கடற்படையினர் அடிக்கடி தாக்குதல் நடத்துவது மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது.

எனவே மீனவர் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் என்றார் முரளிதர் ராவ். தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராண� ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி ...

மருத்துவ செய்திகள்

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...