மம்தா பானர்ஜியின் தவறான ஆட்சிக்கு எதிராகமாபெரும் இயக்கத்தைத் தொடங்குவதற்கு பாஜக திட்டம்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தவறான ஆட்சிக்கு எதிராகமாபெரும் இயக்கத்தைத் தொடங்குவதற்கு பாஜக திட்டமிட்டுள்ளது.


இது தொடர்பாக கொல்கத்தாவில் 2 நாள்கள் நடைபெற்ற மாநில பாஜக செயற் குழுவில் முடிவுசெய்யப்பட்டது.
இதுகுறித்து கொல்கத்தாவில் பாஜக பொதுச்செயலாளரும், மாநில பாஜக ஒருங்கிணைப்பாளருமான கைலாஷ் விஜயவர்கீய தெரிவித்ததாவது: மேற்குவங்க மாநிலத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்கெட்டுள்ளது. இந்தநிலையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமராக வேண்டும் என்று கனவுகாண்கிறார்.


அவரது தவறான ஆட்சிக்கு எதிராக மாநிலமுழுவதும் மாபெரும் இயக்கத்தைத் தொடங்க பாஜக திட்டமிட்டுள்ளது. மேற்குவங்கத்தில் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் உள்ளது. பாஜகவுக்கும், திரிணமூல் காங்கிரஸுக்கும் இடையே மறை முகக் கூட்டணி உள்ளதாக கடந்த 2 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட், காங்கிரஸ் ஆகியகட்சிகள் மேற்கொண்ட தவறான பிரசாரத்தால் பாஜக பாதிக்கப்பட்டது.


ரோஸ்வேலி நிதிநிறுவன மோசடியில் ஈடுபட்ட திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் இருவர் கைதுசெய்யப்பட்ட பின்னர் அதுபோன்ற அரசியல் பேச்சுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. அத்துடன் வங்கத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக பாஜக உருவெடுத்தது என்றார் அவர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...