நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது

மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக சட்ட வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாநகர் தொகுதி பாஜக வேட்பாளர் அம்ரிதா ராயுடன் பிரதமர் நரேந்திரமோடி நேற்று தொலைபேசி மூலம் பேசினார். அப்போது அவர், “ஏழைகளிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தையும் அமலாக்கத் துறையால் முடக்கப்பட்ட சொத்துகளையும் திரும்பப் பெறுவதற்கான சட்டவாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறேன்.

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ள அதேவேளையில் ஊழல் வாதிகள் அனைவரும் தங்களை காப்பாற்றிக்கொள்ள கைகோத்துள்ளனர். மேற்குவங்க மக்கள் மாற்றத்துக்கு வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

பிரதமர் மோடி தொலை பேசியில் பேசிய இரண்டாவது பாஜக வேட்பாளர் அம்ரிதா ராய் ஆவார். இவரது கிருஷ்ணா நகர் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில், எம்.பி. பதவியில் இருந்து நீக்கப்பட்ட மஹுவா மொய்த்ரா போட்டியிடுவதால் இத்தொகுதி கவனம்பெற்றுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த செவ்வாய்க் கிழமை மேற்கு வங்கத்தின் பசீர்ஹட் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் ரேகாபத்ராவுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது ‘நீங்கள் சக்தியின்சொரூபம்’ என்று அவரை பாராட்டினார்.

சந்தேஷ்காலியில் திரிணமூல் காங்கிரஸ் உள்ளூர் தலைவர் ஷாஜகான்ஷேக் மற்றும் அவரது கூட்டாளிகளின் அட்டூழியங்களுக்கு எதிராககுரல் எழுப்புவதில் ரேகா முக்கியப்பங்கு வகித்தார்.

பசீர்ஹட் மக்களவைத் தொகுதியின்கீழ் உள்ள கிராமத்தை சேர்ந்த ரேகா பத்ராவை, அத்தொகுதி வேட்பாளராக பாஜக நிறுத்தியுள்ளது.

கடந்த மார்ச் 6-ம் தேதி பராசத்நகரில் பிரதமர் நரேந்திரமோடியின் பொதுக்கூட்டத்துக்கு இடையில் பிரதமரை சந்தித்து சந்தேஷ்காலி பெண்களின் துயரத்தை பிரதமரிடம் விவரித்தபெண்கள் குழுவில் ரேகா பத்ராவும் இடம்பெற்றிருந்தார்.

வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலியில் ஷாஜகான் ஷேக் மற்றும் அவரதுகூட்டாளிகள் மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன.

இவர்களின் நிலஅபகரிப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத் தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தை மீட்போம் நாட்டை காப் ...

தமிழகத்தை மீட்போம் நாட்டை காப்போம் பாசத்துக்குரிய பாஜக.,வின் என் அருமைத் தாமரை சொந்தங்களே உங்கள் ...

தமிழக மக்களிடம் தொடர்பில் இல்ல ...

தமிழக மக்களிடம் தொடர்பில் இல்லாத முதல்வர் – அண்ணாமலை ''முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களிடமிருந்து Out of contactல் ...

ஏப்ரல் 22-ல் சவுதி அரேபியா செல்கி ...

ஏப்ரல் 22-ல் சவுதி அரேபியா செல்கிறார் பிரதமர் மோடி சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் ...

துணை ஜனாதிபதியை சந்தித்து கவர் ...

துணை ஜனாதிபதியை சந்தித்து கவர்னர் ரவி ஆலோசனை டில்லி சென்றுள்ள கவர்னர் ரவி, துணை ஜனாதிபதி ஜெகதீஷ் ...

யுனேஸ்கா பதிவேட்டில் பகவத் கீத ...

யுனேஸ்கா பதிவேட்டில் பகவத் கீதை பிரதமர் மோடி பெருமிதம் 'யுனெஸ்கோ' உலக நினைவகப் பதிவேட்டில், ஸ்ரீமத் பகவத் கீதை ...

எலான் மஸ்குடன் பிரதமர் மோடி ஆலோ ...

எலான் மஸ்குடன் பிரதமர் மோடி ஆலோசனை அமெரிக்க தொழிலதிபரும், உலகப் பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் ...

மருத்துவ செய்திகள்

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...