நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது

மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக சட்ட வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாநகர் தொகுதி பாஜக வேட்பாளர் அம்ரிதா ராயுடன் பிரதமர் நரேந்திரமோடி நேற்று தொலைபேசி மூலம் பேசினார். அப்போது அவர், “ஏழைகளிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தையும் அமலாக்கத் துறையால் முடக்கப்பட்ட சொத்துகளையும் திரும்பப் பெறுவதற்கான சட்டவாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறேன்.

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ள அதேவேளையில் ஊழல் வாதிகள் அனைவரும் தங்களை காப்பாற்றிக்கொள்ள கைகோத்துள்ளனர். மேற்குவங்க மக்கள் மாற்றத்துக்கு வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

பிரதமர் மோடி தொலை பேசியில் பேசிய இரண்டாவது பாஜக வேட்பாளர் அம்ரிதா ராய் ஆவார். இவரது கிருஷ்ணா நகர் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில், எம்.பி. பதவியில் இருந்து நீக்கப்பட்ட மஹுவா மொய்த்ரா போட்டியிடுவதால் இத்தொகுதி கவனம்பெற்றுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த செவ்வாய்க் கிழமை மேற்கு வங்கத்தின் பசீர்ஹட் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் ரேகாபத்ராவுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது ‘நீங்கள் சக்தியின்சொரூபம்’ என்று அவரை பாராட்டினார்.

சந்தேஷ்காலியில் திரிணமூல் காங்கிரஸ் உள்ளூர் தலைவர் ஷாஜகான்ஷேக் மற்றும் அவரது கூட்டாளிகளின் அட்டூழியங்களுக்கு எதிராககுரல் எழுப்புவதில் ரேகா முக்கியப்பங்கு வகித்தார்.

பசீர்ஹட் மக்களவைத் தொகுதியின்கீழ் உள்ள கிராமத்தை சேர்ந்த ரேகா பத்ராவை, அத்தொகுதி வேட்பாளராக பாஜக நிறுத்தியுள்ளது.

கடந்த மார்ச் 6-ம் தேதி பராசத்நகரில் பிரதமர் நரேந்திரமோடியின் பொதுக்கூட்டத்துக்கு இடையில் பிரதமரை சந்தித்து சந்தேஷ்காலி பெண்களின் துயரத்தை பிரதமரிடம் விவரித்தபெண்கள் குழுவில் ரேகா பத்ராவும் இடம்பெற்றிருந்தார்.

வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலியில் ஷாஜகான் ஷேக் மற்றும் அவரதுகூட்டாளிகள் மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன.

இவர்களின் நிலஅபகரிப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத் தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி; தே.ஜ., ...

''தமிழகத்தில் நிச்சயம் தே.ஜ, கூட்டணி வெற்றி பெறும். கூட்டணி ...

இந்திய வான்வெளி பாதுகாப்பில் ப ...

இந்திய வான்வெளி பாதுகாப்பில் புதிய மைல்கல்: அஸ்தரா ஏவுகணை வெற்றிகரமாக சோதனை பார்வைக்கு அப்பால் இருக்கும் வான் இலக்குகளை துல்லியமாக தாக்கி ...

51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை : ...

51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை : இன்று மோடி வழங்குகிறார் பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு ...

சீனா செல்கிறார் மத்திய அமைச்சர ...

சீனா செல்கிறார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் : 5 ஆண்டுகளில் இது முதல்முறை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீனா செல்ல உள்ளதாக ...

75 வயது ஒய்வு ஊடகங்கள் பரப்பும் வ ...

75 வயது ஒய்வு ஊடகங்கள் பரப்பும் வதந்தி ஆர்.எஸ்.எஸ். சர்சங்கசாலக் மோகன் பாகவத், சங்கத்தின் முக்கிய நிர்வாகியாக ...

பக்தையாகவே சென்றேன் பலம் காட்ட ...

பக்தையாகவே சென்றேன் பலம் காட்டினார் பெருந்தகை என் அப்பன் முருகன் திருச்செந்தூர் முருகன் குடமுழுக்கு விழா. ...

மருத்துவ செய்திகள்

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...