ராகுல் காந்தியின் கருத்து மலிவானது

பிரதமருக்கு ஓய்வு அவசியம் என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி தெரிவித்த கருத்து மலிவானது என்று மத்திய அமைச்சர் வெங்கய்யநாயுடு விமர்சித்தார்.


உத்தரப் பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தல்பிரசார கூட்டம் ஒன்றில் ராகுல்காந்தி பேசுகையில், ’நரேந்திர மோடி மிகவும் களைப்படைந்துள்ளார். அவரது சுமையை மாநில முதல்வர் அகிலேஷ்யாதவால் குறைக்க முடியும். மீண்டும் முதல்வராவதன் மூலம், பிரதமருக்கு சற்று ஓய்வுகொடுக்கவும் அவரால் முடியும்' என்று குறிப்பிட்டார்.


ராகுலின் இந்தக் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமான வெங்கய்ய நாயுடு, தில்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க் கிழமை கூறியதாவது:
நாட்டைவிட்டு வெளியேறுவது மற்றும் திடீரென்று அரசியல் களத்தில் இருந்து மாயமாகிவிடுவது என்ற தனது சொந்த அனுபவத்தின் அடிப்படையில் ஓய்வுகுறித்து ராகுல் பேசியிருக்கலாம். அவர் முக்கியமான விவாதங்களில் பங்கேற்பதற்குக்கூட நாடாளுமன்றத்துக்கு வருவதில்லை.


காங்கிரஸ் கட்சிதான் மிகவும் களைப்படைந்துவிட்டது. அதற்கு ஓய்வுகொடுக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். அதுதான் தற்போது நடைபெற்று வருகிறது. 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அடையப் போகும் தோல்வி தொடர்பான தங்களின் விரக்தியை மூடி மறைப்பதற்காக இதுபோன்ற மலிவான கருத்துகளைத் தெரிவிக்கின்றனர்.


பிரதமர் நரேந்திர மோடி இரவுபகல் பாராமல் உழைக்கிறார். அவர் குறுகிய காலத்திலேயே 40 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்துள்ளார். சர்வதேளவில் அவர் இந்தியர்களுக்காக ஆதரவு திரட்டியுள்ளார். உள்நாட்டில் அவர் பயணம் மேற்கொள்ளாத மாநிலமேஇல்லை. அவர்கவனம் செலுத்தாத பிரச்னையும் இல்லை.
காஷ்மீரை நாம் இழந்துவிட்டோம் என்று முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறிய கருத்து விரும்பத்தகாதது.

நாட்டு மக்கள் இதனால் கொதிப்படைந்துள்ளனர். காஷ்மீர்மக்கள் நம்முடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். காஷ்மீர் பண்டிட்டுகள் சிவராத்திரி பண்டிகையைக் கொண்டாடுவதற்கு முஸ்லிம்கள் உதவ முன் வந்துள்ளனர். முஸ்லிம்களே கோயிலைச் சுத்தப்படுத்திக் கொடுத்துள்ளனர்.காங்கிரஸ் கட்சியானது ஜாதீய, மதவாத, பிரிவினைவாத சக்திகளுடன் கூட்டணி அமைத்துள்ளது என்றார் வெங்கய்ய நாயுடு.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...