மத்திய அரசு ரூ.2,000 நோட்டுகளை வாபஸ்பெறும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை

கருப்புபணம், ஊழல் ஆகியவற்றை ஒழிப்பதற்காக கடந்த நவம்பர்மாதம் 8-ந் தேதி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை பிரதமர் நரேந்திரமோடி அதிரடியாக ஒழித்தார். இதனையடுத்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வெளியிட்டது. இதற்கிடையே மத்திய அரசு புதிய 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பபெறலாம் எனவும் தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் மாநிலங்களவையில் கேள்விநேரத்தின் போது காங்கிரஸ் எம்.பி. மதுசூதன் மிஸ்ட்ரி ரூ.2,000 நோட்டுகளை மத்திய அரசு வாபஸ் பெறும் என்று தகவல் பரவிவருகிறதே?. அது உண்மையா? என கேள்வி எழுப்பினார். 

 

மத்திய உள்துறை விவகார இணைமந்திரி கிரண் ரிஜிஜூ பதிலளிக்கையில், மத்திய அரசு ரூ.2,000 நோட்டுகளை வாபஸ்பெறும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அது வெறும்வதந்தி தான். ரூ.2,000 கள்ளநோட்டுகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

புதிய ரூ.2,000 நோட்டுகளில் பல்வேறுபாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. எனவே 100 சதவீதம் அதை கள்ளநோட்டாக தயாரிக்க முடியாது. அப்படியே கள்ள நோட்டுகள் புழக்கத்தில் வந்தாலும் அதை எளிதாக கண்டறியலாம். இதுதொடர்பாக ரிசர்வ்வங்கி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

 

இந்திய எல்லையில் உள்ள மேற்குவங்காளம், குஜராத், அசாம் போன்ற மாநிலங்களில்தான் அதிக அளவில் ரூ.500, ரூ.2,000 கள்ள நோட்டுகள் பிடிபட்டுள்ளன என்று கூறிஉள்ளார். பாகிஸ்தானில் அச்சடிக்கப்படும் புதிய கள்ள நோட்டுகள் வங்காளதேசம் எல்லை வழியாக இந்தியாவிற்குள் கொண்டுவரப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...