மத்திய அரசு ரூ.2,000 நோட்டுகளை வாபஸ்பெறும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை

கருப்புபணம், ஊழல் ஆகியவற்றை ஒழிப்பதற்காக கடந்த நவம்பர்மாதம் 8-ந் தேதி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை பிரதமர் நரேந்திரமோடி அதிரடியாக ஒழித்தார். இதனையடுத்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வெளியிட்டது. இதற்கிடையே மத்திய அரசு புதிய 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பபெறலாம் எனவும் தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் மாநிலங்களவையில் கேள்விநேரத்தின் போது காங்கிரஸ் எம்.பி. மதுசூதன் மிஸ்ட்ரி ரூ.2,000 நோட்டுகளை மத்திய அரசு வாபஸ் பெறும் என்று தகவல் பரவிவருகிறதே?. அது உண்மையா? என கேள்வி எழுப்பினார். 

 

மத்திய உள்துறை விவகார இணைமந்திரி கிரண் ரிஜிஜூ பதிலளிக்கையில், மத்திய அரசு ரூ.2,000 நோட்டுகளை வாபஸ்பெறும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அது வெறும்வதந்தி தான். ரூ.2,000 கள்ளநோட்டுகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

புதிய ரூ.2,000 நோட்டுகளில் பல்வேறுபாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. எனவே 100 சதவீதம் அதை கள்ளநோட்டாக தயாரிக்க முடியாது. அப்படியே கள்ள நோட்டுகள் புழக்கத்தில் வந்தாலும் அதை எளிதாக கண்டறியலாம். இதுதொடர்பாக ரிசர்வ்வங்கி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

 

இந்திய எல்லையில் உள்ள மேற்குவங்காளம், குஜராத், அசாம் போன்ற மாநிலங்களில்தான் அதிக அளவில் ரூ.500, ரூ.2,000 கள்ள நோட்டுகள் பிடிபட்டுள்ளன என்று கூறிஉள்ளார். பாகிஸ்தானில் அச்சடிக்கப்படும் புதிய கள்ள நோட்டுகள் வங்காளதேசம் எல்லை வழியாக இந்தியாவிற்குள் கொண்டுவரப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...