தமிழகத்தில், இந்த ஆண்டு மருத்துவ படிப்புகளுக்கான நீட்தேர்வுகள் கண்டிப்பாக நடக்கும் எனத்தெரிவித்த மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, 'தமிழக கிராமப்புற மாணவர்களுக்கு, நீட்தேர்வில் சிறப்பு ஒதுக்கீடு அளிக்க தமிழக அரசுக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளது' என்றார்.
மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வான நீட்தேர்வு, நாடு முழுவதும் நடத்தப்படும். இம்மாதிரியான பொது நுழைவுத் தேர்வால், தமிழக கிராமப்புற மாணவர்கள் பாதிப்படைவர் என தமிழகம் நீட்தேர்வில் இருந்து விலகியிருந்தது.
இந்தநிலையில், 'தமிழகத்தில் நீட் தேர்வுகள் இந்தவருடம் கண்டிப்பாக நடக்கும் என மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்'. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, ‘தமிழகத்தில் நீட்தேர்வுகள் கண்டிப்பாக நடக்கும்’ எனத் தெரிவித்தார்.
மேலும், தமிழக கிராமப்புற மாணவர்களுக்கு, நீட்தேர்வில் சிறப்பு ஒதுக்கீடு அளிக்க தமிழக அரசுக்குப் பரிந்துரைப்பதாகவும் கூறினார்.
காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது. |
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |
"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.