மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டை நிராகரித்த மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், அதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், “தேசியதேர்வு முகமை மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. அது மிகவும் நம்பகமான அமைப்பாகும். நீட்தேர்வில் வினாத்தாள் கசிந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. அதன் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம். எந்த ஒரு மாணவரும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வோம்” என்றார்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் பிற படிப்புகளில் சேர 1,563 நீட் 2024 தேர்வர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்குவதற்கான முடிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், ஜூன் 23 ஆம் தேதி மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்தத் தேர்வர்கள் மறுதேர்வை எழுத விரும்பவில்லை என்றால், அவர்களின் முந்தைய மதிப்பெண்கள், கருணை மதிப்பெண்கள் இல்லாமல் வழங்கப்படும்.
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |