என் பதவியை பறித்தால் எடப்பாடியிடம் எகிறும் விஜயபாஸ்கர்

என் பதவியை பறித்தால் ஆட்சி கவிழும்..
எடப்பாடியிடம் எகிறும் விஜயபாஸ்கர்

'நான் மட்டும்தானா குற்றவாளி..?
.உங்கள் கதையைச் சொல்லவா?'
என கூறி, எடப்பாடியை மிரட்டும் வகையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசிவருவதாகவும், அவரை பதவி விலக வைக்க, கடுமையாகப் போராடி வருகிறார் எடப்பாடி பழனிசாமி என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்குப் பணம் வழங்கிய புகாரின் அடிப்படையில், கடந்த 7-ம் தேதி விஜயபாஸ்கர் வீட்டுக்குள் நுழைந்தது வருமான வரித்துறை.

எங்கே உள்ளார் விஜய பாஸ்கர்?

இந்தச் சோதனையில் அவர் வீட்டில் இருந்து ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ‘ஆவணங்களுக்குக் கணக்கு காட்டுகிறேன்' எனப் பதில் அளித்தவர், தற்போது வரையில் எங்கு தங்கியிருக்கிறார் என்பதைக் கண்டறிய முடியவில்லை.

விஜயபாஸ்கர் ஒரு ஆல்ரவுண்டர்….

தினகரன் மௌனம் சாதிப்பதற்கும் முக்கியக் காரணம் இருக்கிறது. கடந்த ஆறு வருடங்களாக கார்டனில் நடந்த அனைத்து பரிவர்த்தனைகளையும் அறிந்தவர் விஜயபாஸ்கர். மணல் முதற்கொண்டு ஏராளமான தொழில்களில் இருந்து கார்டனின் தனிப்பட்ட நபர்களின் கணக்குகளுக்கு பெரும் தொகை கை மாறியிருக்கிறது. ‘


ரகசியம் தெரிந்தவர்…..

‘உங்கள் கணக்கு வழக்குகளில் இன்னும் நேர்மையை எதிர்பார்க்கிறோம்' என அவரிடம் நேரடியாகக் கூறிய வரலாறுகளும் உண்டு. ஆனாலும் விஜயபாஸ்கர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதில்லை. அவருடைய சொந்த சமூகத்து மக்களே அவருக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியபோதும், அவருடைய பதவியைக் காப்பாற்றினார் சசிகலா. சொல்லப் போனால் கார்டனின் அனைத்து ரகசியங்களையும் முழுமையாக அறிந்தவர் அவர்.


அப்பல்லோ மர்மங்கள்…..

‘பதவியை ராஜினாமா செய்யுங்கள்' என வற்புறுத்தினால், தங்களை நோக்கி ஆயுதம் திரும்பும் என்ற கவலைதான் தினகரனை வாட்டி வதைக்கிறது' என விவரித்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், 'உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து, அவருக்குக் கொடுக்கப்பட்டு வந்த மருந்துகள், சிகிச்சை தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள், எம்பாமிங் நடவடிக்கைகள் என அனைத்தும் விஜயபாஸ்கரின் ஒப்புதலோடுதான் நடத்தப்பட்டன. அவருடைய மரணம் இந்தளவுக்கு மர்மமாக இருப்பதற்கும் அவர்தான் காரணம். தன்னிடம் இருந்து பதவி பறிக்கப்படுவதை அவர் விரும்பவில்லை.


எடப்பாடி மீது சீற்றம்…..

‘நீங்கள் சொல்லித்தானே அனைத்தையும் செய்தேன்.நான் மட்டும் ஏன் பலிகடாவாக்கப்பட வேண்டும்?
எடப்பாடி மட்டும் நல்லவர் ஆகிவிட்டாரா? என்னை சீண்டிப் பார்க்க வேண்டாம்' எனக் கொதித்திருக்கிறார் விஜயபாஸ்கர்.. நாளை மறுநாள் வருமான வரித்துறையின் அடுத்தகட்ட கேள்விகளை எதிர் கொள்ள இருக்கிறார் விஜயபாஸ்கர். ‘அதற்குள் அவரைப் பதவியில் இருந்து நீக்கியாக வேண்டும்' என்ற நெருக்கடியில் இருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...