உத்தரபிரதேச ஆன்டி ரோமியோ’ படை

உத்தரபிரதேச சட்ட  சபை தேர்தலின்போது, பாரதிய ஜனதா வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்குவந்தால் பெண்களிடம் குறும்பு செய்யும் நபர்களையும், சமூகவிரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகளையும் ஒடுக்க ‘ஆன்டிரோமியோ’ படை அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தனர்.

பாரதிய ஜனதா ஆட்சியை பிடித்ததையடுத்து முதல்மந்திரி ஆதித்யநாத் ஆன்டி ரோமியோபடையை உடனடியாக அமைக்க உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் இந்தபடை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் முக்கிய நகரங்களில் உலா வந்து இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களை கண்காணிப்பார்கள்.

உத்தரபிரதேசத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள போலீஸ் டி.ஜி.பி. சுல்கான்சிங் மாநிலபோலீஸ் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டினார். இதில் அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் உயர்போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் ‘ஆன்டி ரோமியோ’ படை போலீசார் எப்படி செயல்படவேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 3 மணிநேரம் நடந்த இந்த கூட்டத்தில் ‘ஆன்டி ரோமியோ’ படையினர் எதை, எதை செய்யலாம். எதை செய்யக் கூடாது என்பது குறித்து டி.ஜி.பி. சுல்கான் சிங் விளக்கினார்.

‘ஆன்டி ரோமியோ’ படையில் உள்ள அனைத்து போலீசாரும் உடலில் பொருத்தக் கூடிய கண்காணிப்பு கேமராவை அணிந்திருக்க வேண்டும். அந்தகேமரா மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் செய்பவர்கள் மற்றும் சமூக விரோதசெயல்களில் ஈடுபடுபவர்கள் செய்யும் செயல்களை ரகசியமாக படம்பிடிக்க வேண்டும்.

இதுபோன்ற குற்றங்களை செய்யும் மாணவர்கள், இளைஞர்களை உடனடியாக பிடிக்கவேண்டும். அவர்களை ஜெயிலுக்கு அனுப்பவேண்டும் என்பது நோக்கமாக இருக்க வேண்டியதில்லை.

அவர்களுடைய பெற்றோரை அழைத்து அந்தநபர்களின் நடவடிக்கை குறித்து விளக்கவேண்டும். கேமராவில் எடுக்கப்பட்ட படகாட்சிகளையும் அவர்களிடம் காண்பிக்க வேண்டும்.

கல்லூரி மாணவர்களாக இருந்தால் கல்லூரி முதல்வரிடம் இதுபற்றி தெரிவிக்கவேண்டும். ‘ஆன்டி ரோமியோ’ படையினர் விசாரணை நடத்துவது, வழக்குப்பதிவு செய்வது போன்ற பணிகளை செய்ய வேண்டியதில்லை. அவர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்யும் பணிகளை மட்டும் செய்ய வேண்டும்.

மேலும் பசுவதை தடுப்பு என்றபெயரில் வன்முறையில் ஈடுபடுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும். டி.ஜி.பி. உத்தரவிட்டார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...