மனிதரில் கடவுளையும் கடவுளில் மனிதத்தையும் பார்த்தவர் ராமானுஜர்

சமூக சீர்திருத்த வாதியும், வைணவ துறவியுமான ராமானுஜரின் ஆயிரமாவது திருஅவதார நட்சத்திர தினத்தில் அவரது தபால்தலையை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மனிதரில் கடவுளையும் கடவுளில் மனிதத்தையும் பார்த்தவர் ராமானுஜர்,'' என பிரதமர் நரேந்திரமோடி பேசினார்.


வைணவத்துறவி ராமானுஜரின் ஆயிரமாவது திரு அவதார நட்சத்திர தினத்தையொட்டி டில்லியில் நேற்று சிறப்புதபால் தலை வெளியிட்டு பிரதமர் மோடி பேசியதாவது:எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றிலும் வேறுபாடின்றி வாழ்ந்துகாட்டியவர் ராமானுஜர். சுயநலம் சிறிதும் இன்றி சமூக நல்லிணக்கத்திற்காக பல்வேறு உபதேசங்களை வழங்கியவர், அதன்படியே வாழ்ந்தும் காட்டினார்.

'மக்களுக்கு முக்தி அளிக்கும் மோட்சமந்திரம் ஏன் ஒருவருக்கு மட்டும் தெரிந்ததாக இருக்கவேண்டும். அதை அனைவரும் அறிந்து முக்திநிலை பெறட்டுமே' எனக்கருதி, ஏழைகள், பாமரர்கள் கூடிய சபையில் மோட்ச மந்திரத்தை வெளிப்படையாக உபதேசித்தார். இதிலிருந்தே அவரின் விசாலமான எண்ணம் நமக்குபுரிகிறது.

தன் முன்னோர் வகுத்துவைத்த பிற்போக்கான நடைமுறைகளை தகர்த்ததன் மூலம் அவர் காலத்து துறவிகளுக்கு முன்னோடியாக விளங்கினார் ராமானுஜர். சமூகத்தில்வாழும் அனைத்து தரப்பினரும் சமம் என்பதை நிலை நிறுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அந்தக்காலத்தில் ரங்கம் ரங்கநாதர் கோவில் நிர்வாகம் ஒருகுறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தோர் வசம்மட்டுமே இருந்தது. ராமானுஜர் இந்த நடைமுறையை மாற்றினார். கோவில் நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை அமல் படுத்தினார்.ஒவ்வொரு சமுதாயத்தினரிடமும் ஒவ்வொரு பொறுப்புகள் ஒப்படைக்கப் பட்டன. அனைத்து சமுதாயத்தினருக்கும் முக்கியத்துவம்அளிக்கப்பட்டது.
 

பெண்களுக்கும் சிலபொறுப்புகள் வழங்கப்பட்டன. கோவில் என்பது அனைத்து மக்களுக்கான புகலிடமாக மாறியது. அங்கு பலர் பசியாறினர்; உடை இல்லாதோருக்கு உடைவழங்கப்பட்டது. இலவச மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. வாழ்க்கையை முறைப்படுத்த, நல்லபோதனைகள் வழங்கப்பட்டன.ராமானுஜர் அமல்படுத்திய சீர் திருத்தங்கள், இன்றும் பலகோவில்களில் நடைமுறையில் உள்ளன. ஜாதிய வேறுபாடுகள் அதிகம் இருந்த அந்தக்காலத்தில் ஜாதிய வேறுபாடுகளை வேரறுக்க ராமானுஜர் மிகப் பெரும் பங்காற்றினார்.

அவரது வாழ்க்கைமுறை மற்றும் போதனைகளால் பிறமதத்தை சேர்ந்தோரும் ஏற்றுக்கொண்டனர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் டில்லியை ஆண்ட சுல்தானின் மகள்தான் பீவி நாச்சியார் என்பது இன்று பலருக்கும் தெரியாத உண்மை. கர்நாடகா மாநிலம் மேல் கோட்டை கோவிலில் இவரது சிலையை நிறுவியவர், ராமானுஜரே.
ராமானுஜரின் பெருமை குறித்து அம்பேத்கர் 1927ல் எழுதிய கட்டுரையில் மிகஅருமையான கருத்துக்களை முன் வைத்துள்ளார். அதிலிருந்து சிலவற்றைமட்டும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
'மக்கள் மத்தியில் ஏற்றத் தாழ்வுகளை ஒழித்து அனைவரும்சமம் என்பதை நிலைநாட்ட ராமானுஜர் அரும்பணியாற்றினார். தலித்சமுதாயத்தை சேர்ந்த ஒரு குரு தன்வீட்டில் உணவருந்திச் சென்றபின் வீட்டை சுத்தப்படுத்திய தன் மனைவியின் செயலால் ராமானுஜர் மிகவும் மனம்வருந்தினார்; அதை கடுமையாக எதிர்த்தார்.'தன் மனைவியின்செயல் அவரை மிகவும் பாதித்தது. அந்த பாதிப்பே இல்வாழ்க்கையை துறந்து அவரை சன்னியாசம் பெற துாண்டியது.'அவர் வெறும் உபதேசம் மட்டும் தரவில்லை; அவரது உபதேசத்தின்படி வாழ்ந்தும் காட்டினார். பெண்களுக்கு சமநீதி, சம அந்தஸ்து வழங்கியதில் ராமானுஜருக்கு நிகர் ராமானுஜரே' என, அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார். ஆயிரம் ஆண்டுகளில் ராமானுஜரின் போதனைகள் பல மாற்றங்களை நிகழ்த்தியுள்ளன.

சமுதாயத்தில் இருந்த ஏற்றத்தாழ்வுகள் களையப்பட்டுள்ளன. முற்போக்கு சிந்தனைகள் பெருகியுள்ளன; 'கடவுளின் முன் அனைவரும்சமம்; பக்தி அனைவருக்கும் பொதுவானது' என்ற ராமானுஜரின் சிந்தனை போற்றத்தக்கது. ராமானுஜர் வழிகாட்டுதலின்படி ஏழைகள், பெண்கள் ஒடுக்கப்பட்டோர் என சமுதாயத்தின் அனைத்து தரப்பினருக்கும் சமநீதிகிடைக்க நாம் அனைவரும் பாடு பட வேண்டும்.

ராமானுஜரின் கொள்கைகளை வழிகாட்டுதலை போதனைகளை இளைய சமுதாயத்திற்கு எடுத்துச்செல்வது நம் கடமை. இந்த தருணத்தில், அவரது தபால்தலையை வெளியிடும் பாக்கியம் எனக்கு கிடைத்தில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...