பாகிஸ்தானின் மறுப்பு நம்பத்தகுந்ததாக இல்லை

பாகிஸ்தான் ராணுவத்தாக்குதலில் இந்திய வீரர்கள் கொல்லப்பட்டு உடல் சிதைக்கப் பட்டதற்கு தாங்கள் காரணமல்ல என்ற பாகிஸ்தானின் மறுப்பு நம்பத்தகுந்ததாக இல்லை’ என மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்தார். 

இரண்டு நாள்களுக்கு முன்னர் இந்திய ராணுவவீரர்கள் இருவர் பாகிஸ்தான் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டு உடல் சிதைக்கப் பட்டிருந்தனர். இதற்கு கடும் எதிர்ப்புதெரிவித்த இந்தியா, தக்க பதிலடி கொடுக்கப்படும் என அறிவித்தது. ஆனால், பாகிஸ்தான் தனக்கு இதில் எந்தசம்பந்தமும் இல்லை என மறுப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு மத்திய பாதுகாப்பு மந்திரி அருண்ஜெட்லி கண்டனம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் மறுப்பில் எந்த நம்பகத் தன்மையும் இல்லை என ஜெட்லி கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ‘நடந்த தீவிரவாத தாக்குதலும், இந்திய ராணுவவீரர்களின் மரணமும் பாகிஸ்தான் ராணுவத்தினருக்குத் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. இந்திய ராணுவவீரர்களுக்கு நிகழ்ந்த கொடுமையான மரணத்துக்கு பாகிஸ்தானின் பங்கேற்பு இல்லாமல் இருக்காது’ எனக்கூறியுள்ளார்.

நடந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் தொடர்புள்ளது என்பதற்கான அத்தனை ஆதாரங்களும் இந்திய ராணுவத்திடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்திய எல்லை பாதுகாப்புப்படையின் பதிலடி விரைவில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.