ஆறு ஆண்டுகளாகக் கிடப்பிலிருந்த பறக்கும்சாலைத் திட்டம் இப்போது உயிர்பெற்றுள்ளது

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தொழிற் சாலைகளிலிருந்து பன்னாட்டு ஏற்றுமதிக்காக சென்னை  துறைமுகத்துக்கு சரக்கு வாகனங்கள் வந்துசெல்ல, இப்போதுள்ள நெருக்கடியான சாலை சரிப்பட்டுவராது என்று சிறப்பு வழித்தடம் அமைக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, ஸ்ரீபெரும்புதூரிலிருந்து மதுர வாயல் வரை ஏற்கெனவே உள்ள சாலை வழியாக வாகனங்கள் வரவும் அதன் பின்னர், சென்னை துறைமுகம்வரை மேல்மட்ட சாலை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஆய்வுகளை மத்திய நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்டது. 


இந்தத் திட்டத்தை, 2007 ஆம் ஆண்டு மதுரவாயலில் நடந்த விழாவில் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் தொடங்கிவைத்தார். இந்தத் திட்டத்தின்படி, கூவம் ஆற்றின் ஓரமாகத் தூண்கள்அமைத்து, அதன் மேல் சாலை அமைக்க வேண்டும். 1,815 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்தத்திட்டத்துக்கு, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நிதி ஒதுக்கீடு செய்தது. துறைமுகம்-மதுரவாயல் இடையிலான 18.3 கி.மீ தூரத்துக்கு இந்தப்பறக்கும் சாலையை உருவாக்கினால், 30 நிமிடங்களில் இந்ததூரத்தை சரக்கு வாகனங்கள் கடந்துசெல்ல முடியும்.


இந்தத் திட்டத்துக்காக, நில ஆர்ஜிதம் செய்து தூண்கள் அமைக்கப்பட்டு, 15 சதவிகிதப் பணிகள் முடிந்தநிலையில், தமிழகத்தில் 2011 ஆம் ஆண்டில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு, அ.தி.மு.க. ஆட்சி அமைந்தது. கூவம் ஆற்றின் நீர் வழித்தடத்தை மாற்றும் வகையில் இந்தத்திட்டம் அமைந்துள்ளது என்று இந்தத் திட்டத்துக்குத் தமிழக அரசு முட்டுக்கட்டைபோட்டது. அதன் பின்னர், பி.ஜே.பி அரசு பல தடவை தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதன் அடிப்படையில் மதுரவாயல் பறக்கும்சாலை திட்டத்துக்கு இப்போது தமிழக அரசு தடையில்லாச் சான்று வழங்கியிருக்கிறது. ஆறு ஆண்டுகளாகக் கிடப்பிலிருந்த பறக்கும்சாலைத் திட்டம் இப்போது உயிர்பெற்றுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...