உப்பு தின்றவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும்

பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியதாவது:-அ.தி.மு.க.வை பொருத்த வரை ஒரே தலைமையை நம்பி இயங்கும் அமைப்பில் உட்கட்சி பிரச்சனைகள் ஏற்படுவது இயல்புதான். தமிழகத்தில் திராவிடகட்சிகளுக்கு ஒரே மாற்று, பா.ஜனதா மட்டுமே. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ்கட்சி காணாமல் போய் விட்டது.

தமிழகத்தை பொருத்தவரை எடப்பாடி தலைமையிலான அரசு கடந்த ஓராண்டுகளாக செயல்படவே இல்லை. இன்னும் சொல்லப் போனால் ஜெயலலிதா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் அரசாங்கம் முடங்கிவிட்டது.

தமிழகம் முழுவதும் அரசாங்கமே மணல் விற்பனைசெய்யும் என்று சொன்னார்கள். அதன்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது?தமிழகத்தை பொருத்தவரை கல்வி அமைச்சகம்தவிர மற்ற துறைகள் முடங்கிபோய் நிற்கிறது.

அ.தி.மு.க.வை ஓரணியாக திரட்டும் வி‌ஷயத்தில் டி.டி. வி. தினகரன் 60 நாள் கெடுவிதித்து இருக்கிறார். இதனால் என்ன நடந்து விடப்போகிறது?. ஒரு தப்பு செய்துவிட்டோம் என்று தெரிந்தும், அடுத்தபடியாக தவறு செய்கிறார்கள். உப்புதின்றவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும். மாற்று சிந்தனை உடையவர்களை ஒருங்கிணைத்து செயல்படவேண்டியது அந்த கட்சியின் பொறுப்பு.

தமிழக அரசை நாங்கள் பின்னிருந்து இயக்குவதாக சொல்கிறார்கள். நாங்கள் எந்த அரசாங்க த்தையும் முன்னிருந்து இயக்குவோமே தவிர, பின்னிருந்து இயக்குவது இல்லை.

மு.க.ஸ்டாலின்தான் அப்படி சொல்கிறார். எதிர்காலத்தில் எப்படியாவது முதல் அமைச்சராகி விடலாம் என்று கனவு காணுகிறார். அது ஒரு போதும் நடக்காது.பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக, மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மாதிரி வேறுயாரும் பேசி இருப்பார்களா?

அந்த மாநிலத்துக்கும் மத்திய அரசு தேவையான நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்காக போதிய நிதி ஒதுக்கி தருகிறது.திண்டுக்கல்-தேனி இடையிலான ரெயில்வே திட்டங்களுக்கு போதியநிதி ஓதுக்குவது பற்றி ரெயில்வே அமைச்சகத்திடமே பேசி அழுத்தம் கொடுத்து வருகிறேன்.

நான் பயணிகள் டிக்கெட் கட்டணம் மற்றும் இதரவி‌ஷயங்கள் குறித்து முடிவெடுக்கும் ரெயில்வே கமிட்டியில் உறுப்பினராக உள்ளேன். மத்திய ரெயில்வே அமைச்சகம் 10 ஆண்டுகளாக முடங்கி கிடந்தது. அடுத்த திட்டங்களுக்கான நிதி ஒதுக்கப்படும்பட்சத்தில், திண்டுக்கல்-தேனி ரெயில்வே திட்டங்களுக்கு முன்னுரிமை தரப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...