உப்பு தின்றவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும்

பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியதாவது:-அ.தி.மு.க.வை பொருத்த வரை ஒரே தலைமையை நம்பி இயங்கும் அமைப்பில் உட்கட்சி பிரச்சனைகள் ஏற்படுவது இயல்புதான். தமிழகத்தில் திராவிடகட்சிகளுக்கு ஒரே மாற்று, பா.ஜனதா மட்டுமே. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ்கட்சி காணாமல் போய் விட்டது.

தமிழகத்தை பொருத்தவரை எடப்பாடி தலைமையிலான அரசு கடந்த ஓராண்டுகளாக செயல்படவே இல்லை. இன்னும் சொல்லப் போனால் ஜெயலலிதா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் அரசாங்கம் முடங்கிவிட்டது.

தமிழகம் முழுவதும் அரசாங்கமே மணல் விற்பனைசெய்யும் என்று சொன்னார்கள். அதன்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது?தமிழகத்தை பொருத்தவரை கல்வி அமைச்சகம்தவிர மற்ற துறைகள் முடங்கிபோய் நிற்கிறது.

அ.தி.மு.க.வை ஓரணியாக திரட்டும் வி‌ஷயத்தில் டி.டி. வி. தினகரன் 60 நாள் கெடுவிதித்து இருக்கிறார். இதனால் என்ன நடந்து விடப்போகிறது?. ஒரு தப்பு செய்துவிட்டோம் என்று தெரிந்தும், அடுத்தபடியாக தவறு செய்கிறார்கள். உப்புதின்றவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும். மாற்று சிந்தனை உடையவர்களை ஒருங்கிணைத்து செயல்படவேண்டியது அந்த கட்சியின் பொறுப்பு.

தமிழக அரசை நாங்கள் பின்னிருந்து இயக்குவதாக சொல்கிறார்கள். நாங்கள் எந்த அரசாங்க த்தையும் முன்னிருந்து இயக்குவோமே தவிர, பின்னிருந்து இயக்குவது இல்லை.

மு.க.ஸ்டாலின்தான் அப்படி சொல்கிறார். எதிர்காலத்தில் எப்படியாவது முதல் அமைச்சராகி விடலாம் என்று கனவு காணுகிறார். அது ஒரு போதும் நடக்காது.பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக, மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மாதிரி வேறுயாரும் பேசி இருப்பார்களா?

அந்த மாநிலத்துக்கும் மத்திய அரசு தேவையான நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்காக போதிய நிதி ஒதுக்கி தருகிறது.திண்டுக்கல்-தேனி இடையிலான ரெயில்வே திட்டங்களுக்கு போதியநிதி ஓதுக்குவது பற்றி ரெயில்வே அமைச்சகத்திடமே பேசி அழுத்தம் கொடுத்து வருகிறேன்.

நான் பயணிகள் டிக்கெட் கட்டணம் மற்றும் இதரவி‌ஷயங்கள் குறித்து முடிவெடுக்கும் ரெயில்வே கமிட்டியில் உறுப்பினராக உள்ளேன். மத்திய ரெயில்வே அமைச்சகம் 10 ஆண்டுகளாக முடங்கி கிடந்தது. அடுத்த திட்டங்களுக்கான நிதி ஒதுக்கப்படும்பட்சத்தில், திண்டுக்கல்-தேனி ரெயில்வே திட்டங்களுக்கு முன்னுரிமை தரப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராண� ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி ...

மருத்துவ செய்திகள்

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...