பயிர்களுக்கு நஷ்டஈடு கிடைக்காததற்கு மாநில அரசேகாரணம்

நாகர்கோவில்: மத்திய அரசின் நலத் திட்டங்ளுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தரத்தொடங்கியுள்ளது என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார். நாகர்கோவிலில் மத்திய அரசின் சாதனைவிளக்க கண்காட்சியில் நேற்று கலந்து கொண்ட பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியது:


காஷ்மீரில் முதன்முறையாக  காரில் சுற்றுப்பயணம் செய்த பிரதமராக மோடி இடம்பெற்றுள்ளார். ரயில்வேத் துறை தனியார் மயமாகாது என அத்துறை அமைச்சரே கூறியுள்ளார்.

ரயில்வே குறைகளை டிவிட்டரில் பதிவிட்டால் அது அமைசசரின் கவனத்திற்கே சென்று, அடுத்தரயில் நிலையம் வருவதற்குள் குறைகள் நிவர்த்தி செய்யப்படுகிறது. இதுபோல் வெளிநாடுவாழ் இந்தியர்களின் பிரச்னையும் சுஷ்மாவின் நேரடி கவனத்துக்கு செல்கிறது. இனயம் துறைமுக திட்டம்வந்தே தீரும். இதற்கு சிலரின், சில அமைப்புகளின் சுயநலம்தான் தடையாக உள்ளது. இதன்மூலம் முதல்பயன் அந்த மீனவ கிராம மக்களுக்குத்தான்.  
திருவனந்தபுரம் – கன்னியாகுமரி – தூத்துக்குடி -பாண்டிச்சேரி – சென்னை கடல்வழி போக்குவரத்திற்கு ரூ.200 கோடி மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. தமிழகத்தில் வறட்சியால் ரூ.40 ஆயிரம்கோடி பாதிப்பு என மாநில அரசு கூறியுள்ளது. மோடி அரசு ஏழை விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்பதற்காக  புதிய பயிர்காப்பீடு திட்டம் கொண்டு வந்துள்ளது. இதன்படி ரூ.100 நஷ்டஈடுபெற விவசாயி ரூ.2மட்டும் செலுத்தினால் போதும். மத்திய அரசு அவரது கணக்கில் ரூ.9ம், மாநில அரசு ரூ.9ம் செலுத்தும். ஆக மொத்தம் மொத்தம் ரூ.20 செலுத்தப்படும்.

இதில் தமிழக அரசு அக்கறை செலுத்தாமல் விவசாயிகளிடம் இந்ததிட்டத்தை கொண்டு செல்லாமல் இருந்ததால் வெறும் ரூ.1,848 கோடி மட்டுமே மத்திய அரசால் வழங்கமுடிந்தது. பயிர்களுக்கு நஷ்டஈடு கிடைக்காததற்கு மாநில அரசேகாரணம். தற்போதுதான் தமிழக அரசு மத்திய அரசின் மக்கள் நலதிட்டங்களுக்கு ஒத்துழைப்பு தரத் தொடங்கியுள்ளது. ஹைட்ரோகார்பன் திட்டம் வேண்டாம் என எழுத்துபூர்வமாக தமிழக அரசு இதுவரை தெரிவிக்கவில்லை. அவ்வாறு தெரிவித்தால் உடனடியாக ரத்து செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...