ஜி.எஸ்.டி., சட்டம் ஜூலை 1ம் தேதி திட்டமிட்டபடி அமல் படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜி.எஸ்.டி., அமலாகும் தேதி ஒத்திவைப்பு என்பது வெறும்வதந்தியே எனவும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
நாடுமுழுவதும் ஒரே சீரானவரி விதிப்பு முறையை கொண்டுவரும் வகையில், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவைவரி முறையை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிமுகம்செய்ய உள்ளது. பார்லியில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, ஜூலை 1 முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
தொடரந்து பல்வேறுபொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி விகிதங்களையும் மத்திய அரசு அறிவித்தது. இதனிடையே ஜி.எஸ்.டி., அமலாகும்தேதியை ஒத்தி வைக்க வேண்டும் என பலதரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேற்கு வங்க நிதி அமைச்சர் அமித்மிஸ்ரா, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், ஜி.எஸ்.டி., அமலாகும் தேதி ஒத்திவைக்கப்படுவதாக வந்த தகவல்கள் வெறும்வதந்தி என தெரிவித்துள்ள மத்திய அரசு, திட்டமிட்டபடி ஜூலை 1ம் தேதி அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |
ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ... |
உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ... |
Leave a Reply
You must be logged in to post a comment.