30 ஆண்டுகளாக இழுத்தடிக்க படும் தஞ்சை – பட்டுக்கோட்டை ரயில் பாதை

தஞ்சை பட்டுக்கோட்டை இடையே புதிய ரயில்பாதை அமைக்க நிலஅளவை மேற்கொண்டு 30 ஆண்டுகளாகியும் இது வரை பணிகள் தொடங்கபடவில்லை.

பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு மற்றும் சுற்றுவட்டாரங்களில் இருந்து மாவட்டவேலைவாய்ப்பு அலுவலகம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாற்றுத் திறனாளி மறுவாழ்வு_அலுவலகம் போன்றவற்றுக்காகவும், கல்வி, மருத்துவ தேவைக்காகவும் நாள்தோறும் ஆயிரத்துக்கு அதிகமானோர் தஞ்சைக்கு சென்றுவருகின்றனர்.

பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சைக்கு செல்லும் பொதுமக்கள், வயதானவர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் பேருந்து நெரிசலில் நாள்தோறும் பயணிக்க வேண்டிய அவல நிலை உள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு இந்தப் பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் பலர் தொடர்ந்துசெல்லும் நிலை உள்ளது. எனவே, தஞ்சை- பட்டுக்கோட்டை இடையே ரயில்பாதை அமைக்க வேண்டும் என இந்தப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், 1980-ம் ஆண்டு இதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டது. தொடர்ந்து, 1986-ல் இந்த வழித் தடத்தில் ரயில் பாதை அமைக்கத் தேவையான இடத்தைக்கையகப்படுத்த பல இடங்களில் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு, வரைபடங்களும் தயார்செய்யப்பட்டன. ஆனால், தொடர்ந்து ரயில்பாதை அமைப்பதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கபடாமல் திட்டம் கிடப்பில் போடபட்டது.

ரயில் பாதை அமைக்க வலியுறுத்தி, இந்தப் பகுதியில் உள்ள பல ஊராட்சி மன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ரயில்வே அமைச்சருக்கும் மனு அனுப்பப்பட்டது.

இதுகுறித்து ஒரத்தநாடு வட்டம், உறந்தரையன்குடிக்காடு பகுதியைச் சேர்ந்த புலவர் மாணிக்கம் கூறியதாவது:

கடந்த 30ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை வரை புதிய ரயில்பாதை அமைப்பதற்கு ஒரத்தநாடு பகுதிகளில் நிலம் கையகப்படுத்தபட்டது. அதில் என்னுடைய நிலங்களும் அடங்கும்.

ரயில்வே துறை சார்பாக நிலம் அளக்கபட்டு, அதற்கு அடையாளமாக ஊன்றபட்ட கல் இன்றும் அப்படியே உள்ளது. பட்டுக்கோட்டை- தஞ்சாவூர் இடையே ரயில்போக்குவரத்து ஏற்பட்டால்தான் இந்தப்பகுதி மக்கள் நெரிசல் இன்றி பயணம்செய்ய இயலும். இது தொடர்பாக கடந்த பலஆண்டுகளாக ரயில்வே துறைக்கும், மத்திய, மாநில அமைச்சர்களுக்கும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளேன். ஆனால், இதுவரை எவ்விதநடவடிக்கையும் இல்லை என்றார்

தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை ரயில் பாதை அமைக்கப்பட்டால், தஞ்சாவூர்- அரியலூர் இடையே ரயில் இயக்கப்படும் பட்சத்தில் ராமேசுவரத்திலிருந்து பட்டுக்கோட்டை- தஞ்சாவூர்- அரியலூர் வழியாக குறைந்த பயண நேரத்தில் சென்னைக்கு செல்ல முடியும்.

சிறப்புமிக்க இந்தத் திட்டம் இந்தப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகவே இருந்து_வருகிறது. எனவே, தஞ்சை – பட்டுக்கோட்டை ரயில்பாதை அமைக்க சம்பந்தப்பட்டவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே இந்தப்பகுதி மக்களின் விருப்பமாகும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...