சோழியும் குடுமியும் சும்மா ஆடுமா என்ன?

ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேருக்கும் தூக்கு தண்டனையை ரத்து செய்யகோரும் தமிழக சட் டசபை தீர்மானத்தை போன்று பாராளுமன்ற தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளி அப்சல் குருவின் தூக்கையும் ரத்து செய்யவேண்டும் என்று வலியுறுத்தும் தீர்மானத்தை கொண்டுவர ஜம்மு காஷ்மீர் சுயேச்சை எம்.எல்.ஏ., ஒருவர் நோட்டீஸ் கொடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை தந்திருக்கலாம் அனால் இது எதிர்பார்த்ததே .

சோழியும் குடுமியும் சும்மா ஆடுமா என்ன?

கடந்த 2001, டிசம்பர் 13ம் தேதி, நாடாளுமன்த்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 9 பாதுகாப்பு வீரர்களும், நாடாளுமன்றதின் ஒரு அலுவலரும் தங்கள் உயிரை தியாகம் செய்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் உயிர்களையும் நமது தேசத்தின் மானத்தையும் காப்பாற்றினர் ,

இந்நிலையில் இந்த தாக்குதலில் சதித்திட்டம் தீட்டியதாக அப்சல் குரு கைது செய்யப்பட்டார் , மேலும் அவர் மீதான குற்றம் நிருபிக்கப்பட்டு அவருக்கு மரணதண்டனை விதிக்க பட்டது சுப்ரீம் கோர்ட்டும் கடந்த 2004ம் ஆண்டு மரண தண்டனையை உறுதி செய்தது .

இதைதொடர்ந்து , அப்சல்குருவை 2006ம் ஆண்டு அக்டோபர் 20ந் தேதி தூக்கிலிடுவது என்று முடிவு செய்யபட்டது. இந்நிலையில் அவரது மரண தண்டனையை ரத்து செய்யுமாறு அவர் மனைவி, ஜனாதிபதிக்கு கருணைமனு அனுப்பினார்.

மத்திய அரசு அப்சல் குருவை தூக்கில்போட விரும்பவில்லையோ என்னவோ அவரது கருணைமனுவை கடந்த 4கு ஆண்டுகளாக கிடப்பில் போட்டுவிட்டது, அவரை தூக்கில் போடவேண்டும் என்ற நெருக்கடி நான்கு பக்கமும் நெருக்கவே, அப்சல்குருவின் கருணை மனுக்களை நிரகரித்து அவரை தூக்கில் இடுவதற்கு பதிலாக, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கபட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் நிராகரித்துள்ளார், இதன் மூலம் தமிழ் உணர்வாளர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் , தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை உருவாகும், இதை பயன்படுத்தி அப்சல்குருவை காப்பாற்றி விடலாம் என்ற திட்டம் மறைந்திருப்பதாகவே தெரிகிறது.

தவறு செய்தவர்கள் தண்டிக்க பட வேண்டும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை , ஒருவர் செய்த தவறை நியாய படுத்துவது என்பது, பலநூறு குற்றவாலிகளை உருவாக்குவதற்கு சமம் ,

அதே நேரத்தில் ராஜிவ் காந்தி கொலை வழக்குடன் நாடாளுமன்ற தாக்குதலை ஓப்பிடுவது தவறு , 1991ம் ஆண்டு உயர் திரு நம் பாரத்பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யபட்ட பிறகு தாங்கள் செய்த தவறை உணர்ந்த விடுதலை புலிகள் இந்தியாவின் மீது எந்த வித தாக்குதலையும் நடத்தவில்லை என்பதே உண்மை,

ஆனால் அப்சல் குருவின் நிலையோ வேறு ,லஷ்கர் – இ – தொய்பா மற்றும் முகாஜுதீன் போன்ற தீவிர வாத இயக்கங்களின் முகவர்களான இவரை போன்றவர்கள் இந்தியாவின் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி கொண்டிருக்கின்றனர் , மேலும் தொடர்ந்து தாக்குதலை நடத்த திட்டமிட்டு கொண்டிருக்கின்றனர் ,

இதுவரை முபையில் மட்டும் 1993 ம ஆண்டிலிருந்து இன்று வரை நடைபெற்ற முக்கிய குண்டு வெடிப்பு சம்பவங்கள் மட்டும் 9 பது, இதில் மட்டும் சுமார் 700 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர், பலாயிரம் பேர் காயம் அடைந்து நடை பிணமாக வாழ்ந்து வருகின்றனர் ,

குறிப்பாக அப்சல் குருவின் 2001, டிசம்பர் 13ம் தேதி இந்திய நாடாளுமன்ற தாக்குதலுக்கு பிறகும் 7 முறை முபையில் மட்டும் தாக்குதல் நடை பெற்றுள்ளது இதில் மட்டும் சுமார் 450 பேர் வரை பலியாகியுள்ளனர், இது எதை குறிக்கின்றது இந்தியாவின் எதிர்ப்பை அவர்கள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகின்றது,

இப்படியாக இந்தியாவின் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி பேரழிவை ஏற்ப்படுத்தி கொண்டிருக்கும் தீவிரவாதிகளின் மீது நாம் கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் இது இந்தியாவுக்கு உள்ளேயும் வெளியேயும் நம் பாரத தேசத்தை தக்க காத்துகொண்டிருக்கும் குள்ள நரிகளுக்கும் எட்டப்பர்களுக்கும் பெரும் உற்சாகத்தையே தரும், பெரும் ஊக்கத்தையே தரும் , மேலும் தாக்குதல் நடத்துவதர்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்,

நாடாளுமன்த்தின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் 10 ஆண்டுகளாக விசாரிக்க படுகிறாகள் என்பது மிகவும் வருத்தப்படவேண்டிய ஒரு விஷயம் , மேலும் 4 ஆண்டுகளாக கருணை மனுக்களை பரிசிலனை செய்கிறார்கள் என்றால் அது ஒரு கேவலமான விஷயம் , இவரை காப்பாற்ற சட்டசபை தீர்மானம் என்றால்? (உங்களிடமே விட்டு விடுகிறேன் )

2001, டிசம்பர் 13ம் தேதி இந்திய நாடாளுமன்ற தாக்குதலுக்கு பிறகு தீவிரவாத இயக்கங்கள் இந்தியாவின் மீதான தாக்குதலை நிறுத்தி இருக்கும் என்றால் நாம் அப்சல் குருவை மன்னித்து விடலாம், ஆனால் நாம் இன்று வரை முதுகில் குத்தப்பட்டு வருகிறோம்,

இதேநிலை நீடித்தால் அப்சல் குரு மட்டுமல்ல, கசாபையும் அனேகமாக விடுதலை கூட செய்து விடுவார்கள். மனசாட்சியற்ற நம் அரசியல்வாதிகளுக்கு நம்நாடும் நம் நாட்டு மக்களும் நமது சட்ட திட்டமும் முக்கியமில்லை. படுபாதகம் செய்தவர்களுக்கு மட்டுமே மனித உரிமைகள் பயன்படும் கேவலமான நாடாக நம்நாட்டை போலி மதசார்பின்மை பேசும் அரசியல்வாதிகள் மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

தமிழ் தாமரை VM .வெங்கடேஷ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...