நீங்கள் அமைதியை விரும்புகிறீரா? அப்படியானால் உங்களை மறந்து விடுக.

தென்னிந்திய நாட்டுப்புறத்தல் எளிய பழமொழி ஒன்றைச் சொல்வார்கள். அது வருமாறு :

நல்லவர் இருவர் குறுகிய நடைபாதை ஒன்றில் எதிர் எதிராக நடந்து சென்றால் மூன்று பாதைகள் இருக்கும். நல்லவர் ஒருவரே என்றால் இரண்டு பாதைகள் இருக்கும். இருவருமே கெட்டவர்கள் என்றால் ஒரு பாதை மட்டுமே இருக்கும்.

இதற்கு விளக்கம் தேவைப்படலாம். இருவரும் நல்லவர்களாயின், ஒவ்வொருவரும் அடுத்தவர் பாதையில் நடந்து செல்வதற்கு ஏதுவாகப் பாதையை விட்டுச் சற்று விலகி நடந்து செல்வார். அதனால் ஏற்கனவே இருந்த பாதையின் இரு பக்கத்திலும் புதியதாக இருபாதைகள் ஏற்படும். ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்சிரிப்புடன் வசதியாக நடந்து செல்வார்கள்.

ஒருவர் நல்லவராகவும், மற்றொருவர் கெட்டவராகவும் இருந்தால் நல்லவர் அடுத்தவருக்காகப் பாதையை விட்டு விலகி நடந்து செல்வார். ஆகையால் இரு பாதைகள் இருக்கும். இருவரும் கெட்டவர்களாக இருந்தால், “ஏய் நீ விலகிப் போடா”, “நான் ஏன் விலக வேண்டும்? நீ என்ன பெரிய கொம்பனா! நீ விலகிப் போடா” என்று சொல்லி, ஒருவரை ஒருவர் தள்ளுவான். எனவே ஒரே பாதைதான் இருக்கும்.

இந்தக் கதையின் கருத்து என்ன? நீங்கள் அமைதியை விரும்புகிறீரா; அப்படியானால் உங்களை மறந்து விடுக. முதலில் அடுத்தவரின் நன்மையைக் கருதுவீராக.

நான் உங்களுக்கு எவ்வாறு சேவை செய்வேன்? எவ்வாறு உங்கள் நலனைப் பெறுவேன்? என்று கேட்பீராக. இதுவே சரியான வழி. சேவையால் உடன்பாடு நிலவும். அன்பு செலுத்துக. சேவை செய்க. முதலிடம் அடுத்தவருக்கு. இத்தகைய மனப்பான்மை நிலவினால், அகில உலகமூம் அற்புதமான இடமாக விளங்கும்.

– சுவாமி சச்சிதானந்தா

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...