நீங்கள் அமைதியை விரும்புகிறீரா? அப்படியானால் உங்களை மறந்து விடுக.

தென்னிந்திய நாட்டுப்புறத்தல் எளிய பழமொழி ஒன்றைச் சொல்வார்கள். அது வருமாறு :

நல்லவர் இருவர் குறுகிய நடைபாதை ஒன்றில் எதிர் எதிராக நடந்து சென்றால் மூன்று பாதைகள் இருக்கும். நல்லவர் ஒருவரே என்றால் இரண்டு பாதைகள் இருக்கும். இருவருமே கெட்டவர்கள் என்றால் ஒரு பாதை மட்டுமே இருக்கும்.

இதற்கு விளக்கம் தேவைப்படலாம். இருவரும் நல்லவர்களாயின், ஒவ்வொருவரும் அடுத்தவர் பாதையில் நடந்து செல்வதற்கு ஏதுவாகப் பாதையை விட்டுச் சற்று விலகி நடந்து செல்வார். அதனால் ஏற்கனவே இருந்த பாதையின் இரு பக்கத்திலும் புதியதாக இருபாதைகள் ஏற்படும். ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்சிரிப்புடன் வசதியாக நடந்து செல்வார்கள்.

ஒருவர் நல்லவராகவும், மற்றொருவர் கெட்டவராகவும் இருந்தால் நல்லவர் அடுத்தவருக்காகப் பாதையை விட்டு விலகி நடந்து செல்வார். ஆகையால் இரு பாதைகள் இருக்கும். இருவரும் கெட்டவர்களாக இருந்தால், “ஏய் நீ விலகிப் போடா”, “நான் ஏன் விலக வேண்டும்? நீ என்ன பெரிய கொம்பனா! நீ விலகிப் போடா” என்று சொல்லி, ஒருவரை ஒருவர் தள்ளுவான். எனவே ஒரே பாதைதான் இருக்கும்.

இந்தக் கதையின் கருத்து என்ன? நீங்கள் அமைதியை விரும்புகிறீரா; அப்படியானால் உங்களை மறந்து விடுக. முதலில் அடுத்தவரின் நன்மையைக் கருதுவீராக.

நான் உங்களுக்கு எவ்வாறு சேவை செய்வேன்? எவ்வாறு உங்கள் நலனைப் பெறுவேன்? என்று கேட்பீராக. இதுவே சரியான வழி. சேவையால் உடன்பாடு நிலவும். அன்பு செலுத்துக. சேவை செய்க. முதலிடம் அடுத்தவருக்கு. இத்தகைய மனப்பான்மை நிலவினால், அகில உலகமூம் அற்புதமான இடமாக விளங்கும்.

– சுவாமி சச்சிதானந்தா

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராண� ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி ...

மருத்துவ செய்திகள்

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...