காஷ்மீர் போலீஸ் தலைமை அலுவல கத்தில் தற்கொலைப் படை தாக்குதல்: பாதுகாப்பு படையினர் 8 பேர்பலி

காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள போலீஸ் தலைமை அலுவலகத்தில் தற்கொலைப் படை தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 4 சிஆர்பிஎப். ஜவான்கள் உள்பட பாதுகாப்புபடையை சேர்ந்த 8 பேர் பலியாகினர். மேலும் தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளை பாதுகாப்புபடையினர் சுட்டுக்கொன்றனர்.

 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் போலீஸ்குடியிருப்பு கட்டடத்தை குறித்து நேற்று அதிகாலை 4.30 மணியளவில் தீவிரவாதிகள் தாக்குதல்நடத்தினர். கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு பயங்கரமாக தாக்கினர். தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு எதிராக பாதுகாப்பு படைவீரர்கள் பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதுபற்றி தகவலறிந்த உயர் அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு கூடுதல்பாதுகாப்பு படையினரை அனுப்பி வைத்தனர்.

இந்ததாக்குதலில் பாதுகாப்பு படையினர் சிலர் படுகாயம் அடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 6 பேரும், தீவிரவாதிகள் மறைத்து வைத்திருந்த வெடி குண்டுகளை செயலிழக்கச் செய்தபோது 2 பேரும் பலியாகினர். இவர்களில் 4 பேர் மத்திய ரிசர்வ் படை போலீசார். 3 பேர் மாநில போலீஸ் படையைச்சேர்ந்த சிறப்பு அதிகாரிகள். ஒருவர் போலீஸ்காரர்.

 

இதையடுத்து, பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் 3 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களுடைய உடல்களை பாதுகாப்புபடையினர் மீட்டனர். இதைதொடர்ந்து, அந்தபகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் பொறுப்பு ஏற்றுள்ளது.

 

இந்நிலையில், தீவிரவாதிகள் நடத்தியதாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கு ராணுவ மந்திரி அருண் ஜெட்லி இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், தீவிரவாதிகள் நடத்தியதாக்குதலில் பலியான ஜம்மு-காஷ்மீர் போலீஸ் மற்றும் சி.ஆர்.பி.எப். படைவீரர்களை இழந்துவாடும் அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...