காஷ்மீர் போலீஸ் தலைமை அலுவல கத்தில் தற்கொலைப் படை தாக்குதல்: பாதுகாப்பு படையினர் 8 பேர்பலி

காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள போலீஸ் தலைமை அலுவலகத்தில் தற்கொலைப் படை தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 4 சிஆர்பிஎப். ஜவான்கள் உள்பட பாதுகாப்புபடையை சேர்ந்த 8 பேர் பலியாகினர். மேலும் தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளை பாதுகாப்புபடையினர் சுட்டுக்கொன்றனர்.

 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் போலீஸ்குடியிருப்பு கட்டடத்தை குறித்து நேற்று அதிகாலை 4.30 மணியளவில் தீவிரவாதிகள் தாக்குதல்நடத்தினர். கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு பயங்கரமாக தாக்கினர். தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு எதிராக பாதுகாப்பு படைவீரர்கள் பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதுபற்றி தகவலறிந்த உயர் அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு கூடுதல்பாதுகாப்பு படையினரை அனுப்பி வைத்தனர்.

இந்ததாக்குதலில் பாதுகாப்பு படையினர் சிலர் படுகாயம் அடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 6 பேரும், தீவிரவாதிகள் மறைத்து வைத்திருந்த வெடி குண்டுகளை செயலிழக்கச் செய்தபோது 2 பேரும் பலியாகினர். இவர்களில் 4 பேர் மத்திய ரிசர்வ் படை போலீசார். 3 பேர் மாநில போலீஸ் படையைச்சேர்ந்த சிறப்பு அதிகாரிகள். ஒருவர் போலீஸ்காரர்.

 

இதையடுத்து, பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் 3 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களுடைய உடல்களை பாதுகாப்புபடையினர் மீட்டனர். இதைதொடர்ந்து, அந்தபகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் பொறுப்பு ஏற்றுள்ளது.

 

இந்நிலையில், தீவிரவாதிகள் நடத்தியதாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கு ராணுவ மந்திரி அருண் ஜெட்லி இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், தீவிரவாதிகள் நடத்தியதாக்குதலில் பலியான ஜம்மு-காஷ்மீர் போலீஸ் மற்றும் சி.ஆர்.பி.எப். படைவீரர்களை இழந்துவாடும் அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...