நிதித்துறையின் இணை அமைச்சராகியுள்ளார் பொன்.ராதாகிருஷ்ணன்

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு நிதித்துறை இணை அமைச்சராக கூடுதல்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவை இன்று மூன்றாவதுமுறையாக மாற்றியமைக்கப் பட்டுள்ளது. இதில், ஒன்பதுபேருக்கு கேபினட் அந்தஸ்து வழங்கப்பட்டது. ரயில்வேதுறை அமைச்சராக இருந்த சுரேஷ்பிரபு, வர்த்தகத்துறை ஒதுக்கப்பட்டது. அதற்குபதிலாக, மின்சாரத்துறை அமைச்சராக இருந்த பியூஸ்கோயலுக்கு ரயில்வே துறை ஒதுக்கப்பட்டது. இதையடுத்து பியூஸ் கோயலிடம் இருந்த மின்சாரத்துறை, ராஜ் குமார் சிங்கிற்கு ஒதுக்கப்பட்டது.

இதனிடையே, மத்திய அமைச்சரவையில்,தமிழகத்தைச்சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன் ஏற்கெனவே, கப்பல் போக்குவரத்துத் துறையின் இணை அமைச்சராக இருந்துவருகிறார். இந்நிலையில், தற்போது பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதலாக நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், நிதித்துறையின் இணை அமைச்சராகியுள்ளார் பொன்.ராதாகிருஷ்ணன். ஏற்கெனவே, தமிழகத்தைச்சேர்ந்த நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்புத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

நிதி, பாதுகாப்பு என்று மத்திய அமைச்சரவையின் முக்கியமான இரண்டுதுறைகளில் தமிழகத்தைச் சேர்ந்த இருவருக்கு வழங்கப்பட்டுள்ளது, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முடிவாக கருதப்படுகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...