மாணவர்கள் புதிய இந்தியாவை உருவாக்கவேண்டும்

மாணவர்கள் புதிய இந்தியாவை உருவாக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தி உள்ளார்.

சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் உரையாற்றியதன் 125-வது ஆண்டு தினம் மற்றும் பண்டித தீனதயாள் உபாத்யாயாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாணவர்களுக்கான கருத்தரங்கம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

இன்றைய சூழ்நிலையில் எந்த அளவுக்குவளர்ச்சி அடைந்துள்ளது என்பதை வைத்துதான் ஒருநாட்டை உலக நாடுகள் மதிப்பீடு செய்கின்றன. மாறாக, அந்த நாடு 5,000 ஆண்டுகளுக்கு முன்போ, அல்லது ராமர் அல்லது புத்தர்காலத்திலோ எப்படி இருந்தது என்பதை கருத்தில் கொள்வதில்லை.

எனவே, மாணவர்கள் புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அதற்காக பல்வேறு துறைகளில் ஆராய்ச்சியை மேற்கொள்வதுடன் புதிய கண்டு பிடிப்புகளை உருவாக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு சுவாமி விவேகானந்தர் ஆதரவாக இருந்தார். அவரது எண்ணப்படியே மத்திய அரசு செயல்பட்டுவருகிறது. மேலும் அன்பு மற்றும் சகோதரத்துவத்தின் தூதுவராக விவேகானந்தர் விளங்கினார்.

குறிப்பாக, 125 ஆண்டுகளுக்கு (1893) முன்பு இதே நாளில் (9/11) அமெரிக்காவின் சிகாகோ நகரில் தனது இளம்வயதில் விவேகானந்தர் ஆற்றிய உரை பல்வேறு மதத்தினரின் இதயங்களையும் கவர்ந்தது.

ஆனால் அதே அமெரிக்க மண்ணில் கடந்த 2001-ம் ஆண்டு இதே நாளில் (9/11) உலக வர்த்தக மைய கட்டிடத்தை தீவிரவாதிகள் விமானங்களை மோதி தகர்த்தனர். இதனால் பேரழிவு ஏற்பட்டது. விவேகானந்தரின் உரையை அனைவரும் மறக்காமல் இருந்திருந்தால் இந்த கோரசம்பவம் நடந்திருக்காது.

பொதுமக்கள் அடிக்கடி வந்தேமாதரம் என கூறுகிறார்கள். ஆனால், பெண்களை மதிக்கிறார்களா என்பது கேள்விக்குறிதான். அதுபோல, பான்பராக்கை சிலர் வாயில் போட்டு மென்றுவிட்டு தாய் இந்தியா (பூமி) மீது துப்புகின்றனர். எனவே, தூய்மையைப்பற்றி கவலைப்படா தவர்களுக்கும் பெண்களை மதிக்காதவர்களுக்கும் ‘வந்தே மாதரம்’ என்று முழக்கமிட உரிமை இல்லை.

பிறமாநில கலாச்சார நிகழ்ச்சிகளையும் நடத்த கல்லூரி நிர்வாகங்கள் முன்வரவேண்டும். அதாவது ஹரியாணாவில் உள்ள கல்லூரிகளில் தமிழர் பண்டிகைகளையும் பஞ்சாபில் உள்ள கல்லூரிகளில் கேரள பண்டிகைகளையும் கொண்டாட வேண்டும். அதேநேரம் ‘ரோஜா தினத்தைக்’ (காதலர் தினம்) கொண்டாடுவதற்கு நான் எதிரானவன்அல்ல. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...