எஸ்எஸ்பி படைக்காக பிரத்யேக உளவுப்பிரிவு

சமூக ஊடகங்களில் தவறானதகவல்களை வெளியிட்டு பதற்றத்தை ஏற்படுத்த தேசவிரோதசக்திகள் முயற்சி மேற்கொண்டுள்ளன. எனவே அவ்வாறு வரும் தகவல்களை ஆராயாமல், வாட்ஸ்-ஆப் போன்ற வலைதளங்களில் பகிர வேண்டாம்' என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.


துணை ராணுவப் படைப் பிரிவுகளில் ஒன்றான சஷஸ்திர சீமா பல் (எஸ்எஸ்பி) படைக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள உளவுப்பிரிவை அவர் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் தொடங்கிவைத்தார். இந்தியா-நேபாளம் இடையிலான 1,751 கி.மீ. எல்லையையும், இந்தியா-பூடான் இடையிலான 699 கி.மீ. நீள எல்லையையும் காக்கும்பணியில் ஈடுபட்டுள்ள இப்படையின் வீரர்களை ராஜ்நாத்சிங் பாராட்டினார். அவர் மேலும் பேசியதாவது:


பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளுடனான நமது எல்லைப்பகுதி முள்வேலியிடப்பட்டுள்ளது. அவ்வாறு இல்லாமல், இந்தியா-நேபாளம், இந்தியா-பூடான் ஆகியவற்றுக்கு இடையிலான எல்லைகள் திறந்தவெளி எல்லைகளாக உள்ளன. விசாஇல்லாமல் இருதரப்புமக்களும் சென்றுவர இந்த எல்லைகள் அனுமதிக்கின்றன. இத்தகைய திறந்தவெளி எல்லைகளைப் பாதுகாப்பது மிகவும் கடினமாகும்.


ஒரு திறந்தவெளி எல்லையில், எந்த வழியாக ஒருகுற்றவாளி வருவார் என்பதையோ, யாரெல்லாம் தேசவிரோதி என்பதையோ, கள்ள நோட்டுகள் அல்லது போலி போதை மருந்துகள் ஆகியவற்றைக் கொண்டு வருவது யார் என்பதையோ பாதுகாப்புப் படையினருக்குத் தெரியாது.


வீரமரணமடையும் துணை ராணுவப் படை வீரர் ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் ரூ.1 கோடி இழப்பீடு அளிக்கப்படும் என்று நான் ஏற்கெனவே அறிவித்துள்ளேன். அதேவேளையில் தற்போது பணியில்இருக்கும், நெருக்கடியான சூழலைச் சந்திக்கும் படைவீரர்களுக்கும் ஏதாவது செய்வது குறித்து பரிசீலித்து வருகிறேன். அவர்களுக்கு நிச்சயம் நல்லதுசெய்வேன்.


அடிப்படை இல்லாத, தவறான செய்திகளும், தகவல்களும் வாட்ஸ்-ஆப் போன்ற சமூகவலைதளங்களில் தொடர்ந்து பரப்பப்படுகின்றன. அவற்றைப் பார்க்கும்பலரும் அவை உண்மை என்று நம்பி விடுகின்றனர்.
இவ்வாறு சமூகத்தில் பதற்றைத் ஏற்படுத்த தேசவிரோத சக்திகள் முயற்சிக்கின. எனவே, அதுபோன்ற தகவல்களை ஆராய்ந்து பார்க்காமல் சமூக வலை தளங்களில் பகிர வேண்டாம் என்று எஸ்எஸ்பி படை வீரர்களைக் கேட்டுக் கொள்கிறேன். அது போன்ற தகவல்களை நம்பாமலும், பகிராமலும் நாம் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்றார் ராஜ்நாத் சிங்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...