நடராஜனுக்கு செய்யப்பட்ட உறுப்பமாற்று சிகிச்சையில் விதி மீறல்

சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு செய்யப்பட்ட உறுப்பமாற்று சிகிச்சையில் விதி மீறல்கள் நடந்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலக் கோளாறு காரணமாக சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நேற்று கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. நடராஜனுக்கு யார் உறுப்புதானம் செய்தார்கள் என்று மருத்துவமனை தெளிவாக குறிப்பிடவில்லை.

தஞ்சாவூரைச் சேர்ந்த மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உறுப்புகள் 74 வயது நபருக்கு பொருத்தப் பட்டதாக மருத்துவமனை கூறி இருந்தது. இதனால் இளைஞர் கார்த்திக்கின் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் நடராஜனுக்கு பொருத்தப் பட்டிருக்கலாம் என்று அதிகாரப் பூர்வமில்லாத செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில் நடராஜனுக்கு செய்த உறுப்புமாற்று சிகிச்சையில் விதிமீறல்கள் இருப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் சந்தேகம் எழுப்பியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசியவர் கூறியதாவது : நடராஜனுக்கு செய்த உறுப்புமாற்று சிகிச்சையில் விதிகள் பல மீறப்பட்டுள்ளது, இதில் பல சந்தேகங்கள் எழுகின்றன. சந்தேகங்கள் தீர்க்கப்பட வேண்டும்.

தஞ்சாவூரைச் சேர்ந்த ஏழைக் குடும்பத்தை சேர்ந்த ஒரு இளைஞர் எப்படி குளோபல் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டார். அவருக்கு நிதியுதவி செய்தது யார்.
 

ஒருநோயாளி மூளைச்சாவு அடைந்தால் அவரின் பெரும்பாலான உறுப்புகள் அவர் சிகிச்சைபெற்ற அந்த மருத்துவமனையில் உள்ள மற்றவர்கள் பெறவே அனுமதி உள்ளது. ஆனால் இரண்டாம்கட்ட ஆலோசனை பெற வந்த குளோபல் மருத்துவமனை எப்படி உறுப்புகளை பெற்றது.

விதிகள் அப்படிஇருக்க கார்த்திக்கின் பெரும்பாலான உறுப்புகள் எப்படி குளோபல் மருத்துவமனை நோயாளிகளுக்கு கிடைத்தது என்பன உள்ளிட்ட பலசந்தேகங்கள் இதில் எழுகின்றன. எனவே இந்த உறுப்புமாற்று சிகிச்சை குறித்து முறையான விசாரணை நடத்தவேண்டும் என்று தமிழிசை கூறியுள்ளார்
 

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகண� ...

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகணை; இந்திய ராணுவம் ஆய்வில் அம்பலம் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷாஹீன் ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்� ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்; இன்று பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி இந்தியா-பாகிஸ்தான் மோதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் போர் ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய்ந்த நாடாக இருக்க வேண்டும் – மோகன் பகவத் ''உலகின் நலனுக்காக இந்தியா சக்திவாய்ந்த நாடாக இருக்க வேண்டும்,'' ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழை ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழைந்து பதிலடி – அமித்ஷா பெருமிதம் 'சுதந்திரத்திற்குப் பிறகு நமது ராணுவம் பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ. ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவ� ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் ''பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி,'' ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு ந ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் காப்பியடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ...

மருத்துவ செய்திகள்

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...