நடராஜனுக்கு செய்யப்பட்ட உறுப்பமாற்று சிகிச்சையில் விதி மீறல்

சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு செய்யப்பட்ட உறுப்பமாற்று சிகிச்சையில் விதி மீறல்கள் நடந்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலக் கோளாறு காரணமாக சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நேற்று கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. நடராஜனுக்கு யார் உறுப்புதானம் செய்தார்கள் என்று மருத்துவமனை தெளிவாக குறிப்பிடவில்லை.

தஞ்சாவூரைச் சேர்ந்த மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உறுப்புகள் 74 வயது நபருக்கு பொருத்தப் பட்டதாக மருத்துவமனை கூறி இருந்தது. இதனால் இளைஞர் கார்த்திக்கின் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் நடராஜனுக்கு பொருத்தப் பட்டிருக்கலாம் என்று அதிகாரப் பூர்வமில்லாத செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில் நடராஜனுக்கு செய்த உறுப்புமாற்று சிகிச்சையில் விதிமீறல்கள் இருப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் சந்தேகம் எழுப்பியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசியவர் கூறியதாவது : நடராஜனுக்கு செய்த உறுப்புமாற்று சிகிச்சையில் விதிகள் பல மீறப்பட்டுள்ளது, இதில் பல சந்தேகங்கள் எழுகின்றன. சந்தேகங்கள் தீர்க்கப்பட வேண்டும்.

தஞ்சாவூரைச் சேர்ந்த ஏழைக் குடும்பத்தை சேர்ந்த ஒரு இளைஞர் எப்படி குளோபல் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டார். அவருக்கு நிதியுதவி செய்தது யார்.
 

ஒருநோயாளி மூளைச்சாவு அடைந்தால் அவரின் பெரும்பாலான உறுப்புகள் அவர் சிகிச்சைபெற்ற அந்த மருத்துவமனையில் உள்ள மற்றவர்கள் பெறவே அனுமதி உள்ளது. ஆனால் இரண்டாம்கட்ட ஆலோசனை பெற வந்த குளோபல் மருத்துவமனை எப்படி உறுப்புகளை பெற்றது.

விதிகள் அப்படிஇருக்க கார்த்திக்கின் பெரும்பாலான உறுப்புகள் எப்படி குளோபல் மருத்துவமனை நோயாளிகளுக்கு கிடைத்தது என்பன உள்ளிட்ட பலசந்தேகங்கள் இதில் எழுகின்றன. எனவே இந்த உறுப்புமாற்று சிகிச்சை குறித்து முறையான விசாரணை நடத்தவேண்டும் என்று தமிழிசை கூறியுள்ளார்
 

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...