ஆய்வுசெய்யும் அதிகாரிகளுக்கான விருந்தோம்பல் நிறுத்தப்பட வேண்டும்

மத்திய அரசு கொள்முதல் செய்யும் பொருள்களின் தரம்குறித்து ஆய்வுசெய்யும் அதிகாரிகளுக்கான விருந்தோம்பல் உள்ளிட்ட இதரசெலவுகளை விற்பனையாளர்கள் ஏற்பது நிறுத்தப்படவேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது.


 இது தொடர்பான சுற்றறிக்கையை மத்திய அரசுத்துறைகளின் செயலர்களுக்கு நிதியமைச்சகம் அண்மையில் அனுப்பியுள்ளது. இந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:


 மத்திய அரசின் பல்வேறு துறைகள் சார்பில் ஏராளமான பொருள்கள் கொள்முதல்செய்யப்பட்டு வருகின்றன. இந்தப் பொருள்களின் தரம், அதற்கான மூலப்பொருள்கள் பெறப்படும் முறை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஒவ்வொரு துறையிலும் அதிகாரிகள் நியமிக்கப் பட்டிருக்கின்றனர்.


 இவ்வாறு நியமிக்கப் பட்டிருக்கும் அதிகாரிகள், கொள்முதல் செய்யப்படும் பொருள்கள்குறித்து ஆய்வு மேற்கொள்ளும்போது, அவர்களுக்கான உணவுபயணம், தங்குமிடம் உள்ளிட்ட செலவுகளை விற்பனை யாளர்கள் ஏற்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும், இந்தச்செலவுகளை விற்பனையாளர்கள்தான் ஏற்கவேண்டும் என்ற ஒப்பந்தத்தையும் சில அரசுத் துறைகள் செய்து வருகின்றன.


 இதுபோன்ற செயல்களால், இந்த ஆய்வுப்பணிகளின் சுதந்திரம் தடுக்கப்படும். அதுமட்டுமன்றி, தரமான பொருள்களை விற்பனைசெய்யாத நிறுவனங்களை அடையாளம் காண்பதிலும் சிக்கல் ஏற்படவாய்ப்புள்ளது.


 எனவே, ஆய்வு அதிகாரிகளுக்கான விருந்தோம்பல் உள்ளிட்ட செலவுகளை விற்பனை யாளர்கள் ஏற்கும்முறை உடனடியாக நிறுத்தப்படவேண்டும். இது தொடர்பாக விற்பனை யாளர்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தால் அவற்றை ரத்துசெய்ய வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...