மலிவு விலையில் தக்காளி விற்பனையை தொடங்கிவைத்தார் -மத்திய அமைச்சர்

தலைநகர் தில்லி மற்றும் புறநகர் பகுதிகளில் தக்காளி விலையை கட்டுப்படுத்தும் விதமாக, தேசிய கூட்டுறவு நுகர்வோர் விற்பனை இணையம் வாயிலாக வேன் மூலம் மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் திரு பிரலாத் ஜோஷி இன்று  (29.07.2024) தொடங்கிவைத்தார். தில்லி, நொய்டா, குருகிராம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு கிலோ ரூ.60 விலையில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. நாடாளுமன்ற வீதி, மத்திய அரசு அலுவலக வளாகம், லோதி காலனி, ஐடிஓ, ஐஎன்ஏ மார்கெட், மண்டி ஹவுஸ், துவாரகா, நொய்டா, குருகிராம் உள்ளிட்ட 18 சில்லரை விற்பனை மையங்களில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பிரலாத் ஜோஷி, இன்று தக்காளி  மூன்று இடங்களில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படுகிறது என்றார். இதன் மூலம் இடைத்தரகர்கள் லாபமடைவது தடைக்கப்பட்டு, நுகர்வோருக்கு பொருட்கள் கிடைப்பது உறுதிசெய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

வரும் நாட்களில் சில்லரை விற்பனை மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்கு முன் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ ? அண்ணாமலை சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வெளியே, ஆட்டோவில் ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி  ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி – அண்ணாமலை நமது குழந்தைகளுக்கான அடிப்படைப் பாதுகாப்பை உறுதி செய்வதில் தி.மு.க., ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் : அண்ணாமலை திட்டவட்டம் திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் என தமிழக பா.ஜ., ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாம ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாமலை விமர்சனம் தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமை என்பது ஒரு பயங்கரமான ...

மருத்துவ செய்திகள்

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...

கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்

உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...