குஜராத் மாநிலம் அகமதா பாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேசியதாவது: மோடி சிறப்பாக ஆட்சிநடத்தி வருகிறார். 2016-17ம் ஆண்டில் மட்டும் புதிதாக 1 கோடி பேர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் இணைந்துள்ளனர். அப்படியென்றால், இந்த ஓராண்டில்மட்டும் புதிதாக 1 கோடி பேருக்கு வேலை கிடைத்துள்ளது.
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர், மோடி ஆட்சியில் வேலை வாய்ப்பின்மை நிலவிவருவதாக பொய்ப்பிரசாரம் செய்கின்றனர். ராகுல் போன்றோருக்குதான் இந்த மோடி ஆட்சியில் வேலையில்லை. முத்ரா யோஜ்னா திட்டத்தின் மூலம் 7 கோடி பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். திறன் மிகுந்த இளைஞர்களுக்கு அப்ரன்டீஸ் பயிற்சி தரும் பொருட்டு, நேஷனல் கேரியர் போர்டல் துவக்கப் பட்டுள்ளது. அதிக வேலைவாய்ப்பு உருவாக்கித்தந்த மாநிலங்களை கவுரவிக்கும் வகையிலான விருதுகளை குஜராத் அரசு, முந்தைய ஐக்கிய முற்போக்குகூட்டணி அரசிடமிருந்து 9 முறை பெற்றுள்ளது.
காங்கிரஸ் மீ்ண்டும் ஆட்சிக்குவந்தால் பொருட்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி. வரி கொண்டு வரப்படும் என்று ராகுல் உறுதியளித்துள்ளார். மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்று மோடி தலைமையிலான நிர்வாகம், பெரும்பாலான மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு 5 முதல் 12 சதவீதம் வரையே ஜி.எஸ்.டி. வரியாக நிர்ணயி த்துள்ளது. ஆனால், ராகுல் சொல்லும்படிபார்த்தால், அனைத்து பொருட்களுக்கும் 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். இவ்வாறு ஜவடேகர் கூறினார்.
கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ... |
உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ... |
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.