தப்புக்கணக்கு போட்டு அசிங்கப்பட்ட ராகுல்

குஜராத் மாநிலத்தில் விலைவாசி உயர்ந்து ள்ளதாக விமர்சித்து ராகுல்காந்தி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தவறுகண்டுபிடித்த நெட்டிசன்கள் அவரை வைத்து காமெடி செய்துவருகிறார்கள்.

குஜராத் மாநிலத்தில் வரும் டிசம்பர் 9 மற்றும் 14ஆம் தேதிகளில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனைமுன்னிட்டு பாஜகவினரும் காங்கிரஸ்காரர்களும் அம்மாநிலத்தில் சூறாவளிப் பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் பல இடங்களில் தொடர்ந்து பொதுக் கூட்டங்களில் பேசி வருகின்றனர்.

இந்நிலையில், ராகுல்காந்தி குஜராத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரங்களுடன் கூடிய பதிவை ட்விட்டரில் வெளியிட்டார். இதில் 2014ஆம் ஆண்டு 2017ஆம் ஆண்டுகளில் அத்தியாவசிய பொருட்களின் விலையை பட்டியலிட்டு, விலை வாசி எத்தனை சதவீதம் உயர்ந்துள்ளது என்பதை குறிப் பிட்டிருந்தார்.

ஆனால், விலை வாசி உயர்வு சதவீதம் தவறாகவும் ஒவ்வொன்றிலும் 100 சதவீதம் அதிகமாகவும் இருந்தது. உடனேகவனித்து நெட்டிசன்கள் கலாய்க்க தொடங்கினர். அசிங்கப்பட்ட ராகுல் அந்த பதிவை டெலிட்செய்துவிட்டு, விலைவாசி உயர்வு சதவீதத்தை குறிப்பிடுவதற்குப் பதிலாக விலைவாசியில் உள்ள வித்தியாசத் தொகையைமட்டும் குறிப்பிட்டு மீண்டும் அதே பதிவை போட்டார்.

இதையும்விட்டு வைக்காத நெட்டிசன்கள் சதவீதக்கணக்கு தெரியாமல் கழித்தல்கணக்கு போட்டு தப்பித்து விட்டார் என்று ராகுலை வைத்து காமெடி செய்துவருகின்றனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...