அத்வானியின் ரதயாத்திரையின் மூலம் காங்கிரஸ்சின் குறைகளை மக்களிடம் எடுத்து கூறுவோம்

பா ஜ க தமிழ்மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்க்கு மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

கூட்டம் முடிந்த பிறகு பாஜக தேசிய செயலாளர் முரளிதர்ராவ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது

வரும் உள்ளாட்சிதேர்தலில் கொங்குநாடு முன்னேற்ற கழகம் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. உள்ளாட்சிதேர்தலில் தொகுதிகளில் இருக்கும் பிரச்சினைகளை முன்வைத்து பிரசாரம் செய்வார்கள். விரைவில் உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்பட்டியலை வெளியிடுவோம்.

ஊழலுக்கு எதிரான அத்வானியின் ரதயாத்திரை அக்டோபர் மாதம் 11ந் தேதி தொடங்குகிறது . அத்வானியின் ரதயாத்திரை அக்டோபர் கடைசிவாரம் அல்லது நவம்பர் முதல்வாரம் தமிழ் நாட்டுக்கு வருகிறது. இந்த ரதயாத்திரையின் மூலம் காங்கிரஸ்சின் குறைகளை மக்களிடம் எடுத்து கூறுவோம்.

இந்த ரதயாத்திரை மூலம் மத்தியில் ஆட்சிமாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கிறோம். நரேந்திரமோடிதான் பிரதமர் வேட்பாளர் என அத்வானி ஏற்கனவே தெரிவித்துவிட்டார் . நரேந்திரமோடி பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படுவாரா? என கேட்கிறார்கள். இதிலிருந்து பாஜகாவில் ஏராளமான பிரதமர் வேட்பாளர்கள் உள்ளார்கள் என தெரிகிறது. காங்கிரஸ்சில் இதுபோன்ற கேள்விகள் கேட்கமுடியாது. என்று முரளிதர்ராவ் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப� ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப்பதை பார்ப்பது மகிழ்ச்சி நரேந்திர மோடி பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்று, ஓராண்டு ...

சமூகநீதி எப்படி சாத்தியமாகும்

சமூகநீதி எப்படி சாத்தியமாகும் திருமண ஆசை காட்டி பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி. ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி.மு.க., அரசு நாடகமாடுகிறதா: நயினார் நகேந்திரன் கேள்வி தமிழகத்தின் கொங்கு பகுதியில் பெருகி வரும் கொலை, கொள்ளை ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவ ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவதில் கவனம்; பிரதமர் மோடி பெருமிதம் ''கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற� ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற்றி; இந்தியாவில் குறைந்தது நக்சல் வன்முறை இல்லாத இந்தியாவை உருவாக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைக்கு மத்தியில், ...

மருத்துவ செய்திகள்

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...