அவசர அவசரமாக பாகிஸ்தான் அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?

குஜராத்தேர்தல்  பிரசாரத்தின் போது காங்கிரசுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிக்கிறது. இதற்காக, ரகசிய ஆலோசனை நடந்துள்ளது என பிரதமர்மோடி குறிப்பிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உள்நாட்டில் நடக்கும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, தேவையி ல்லாமல் பாகிஸ்தானின் பெயரை இழுக்கவேண்டாம். பாகிஸ்தான் குறித்து பொய்யான, ஜோடிக்கப்பட்ட கற்பனை குற்றச் சாட்டுகளை கூறி, பிரசாரம் செய்ய வேண்டாம். தங்கள் சொந்தபலத்தில் வெற்றி பெறுவதற்கு, கட்சிகள் முயற்சிக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

இதற்கு, மத்தியசட்ட அமைச்சர், ரவிசங்கர் பிரசாத் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,  மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்கு தேர்தலை எப்படி நடத்தவேண்டும்; அதை எப்படி சந்திக்கவேண்டும் என, யாரும் சொல்லித்தர தேவையில்லை. இந்தியாவின் ஜனநாயகத்தில், மற்றவர்கள் தலையிடுவதை நாங்கள் விரும்ப வில்லை. காங்கிரசுக்கு உதவும் வகையில், தேர்தலை எப்படிசந்திக்க வேண்டும் என, வீண் பிரசங்கத்தில் ஈடுபடவேண்டாம். பயங்கரவாதத்தை எந்தளவுக்கு, பாகிஸ்தான் ஆதரிக்கிறது; ஊக்கு விக்கிறது என்பது, உலகுக்கு தெரியும். நாங்கள், எங்கள் ஜனநாயகத்தை பெருமையுடன் பார்க்கிறோம். ஆதாரமில்லாமல், மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட, மிகவும் பிரபலமான தலைவரான, பிரதமர் மோடி குற்றச் சாட்டை கூறவில்லை. மிகவும் அவசர அவசரமாக, இந்தபிரச்னையில், பாகிஸ்தான் அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன? இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...