ராகுல் காந்திக்கு எதிரான உரிமை மீறல்; சபாநாயகரின் பரிசீலனைக்கு அனுப்பினார் வெங்கய்ய நாயுடு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான உரிமைமீறல் தீர்மானத்தை, மக்களவை சபாநாயகர் சுமித்திர மகாஜனின் பரிசீலனைக்கு, குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு அனுப்பி வைத்துள்ளார்.

குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மீதான குற்றச்சாட்டை பிரதமர் நரேந்திரமோடி திரும்பப்பெற வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை அலுவல் முடங்கியது. இதையடுத்து காங்கிரஸ் உறுப்பினர் களைச் சமாதானப் படுத்தும் வகையில், மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி விளக்கம் அளித்தார். இதற்கு ராகுல் காந்தி, “பிரதமர் மோடி நினைப்பது ஒன்று, பேசுவதுவேறு என தெளிவுபடுத்திய ஜேட்லிக்கு நன்றி” என கிண்டல்செய்தார்.

இதையடுத்து மாநிலங்களவையில் ராகுல் காந்திக்கு எதிராக உரிமைமீறல் தீர்மானம் கொண்டுவர அவை விதி 187-ன் கீழ் பாஜக உறுப்பினர் புபிந்தர்யாதவ் நோட்டீஸ் அளித்தார்.“மாநிலங்களவை பாஜக தலைவர் அருண்ஜேட்லியை ராகுல் வேண்டுமென்றே அவமரியாதை செய்துள்ளார்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

குளிர்கால கூட்டத்தொடரின் இறுதி நாளான நேற்று (வெள்ளிக் கிழமை) இந்த நோட்டீஸ் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும், இதுமக்களவை விதிகளுக்கு உட்பட்டதாக இருக்கும் என, மாநிலங்களவை தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான வெங்கய்யநாயுடு தெரிவித்தார்.

இந்நிலையில் உரிமைமீறல் புகாருக்கு அடிப்படை ஆதாரம் இருப்பதாக கருதுவதால் அதை மக்களவை சபாநாயகர் சுமித்திர மகாஜனின் பரிசீலனைக்கு, வெங்கய்ய நாயுடு அனுப்பி யுள்ளார். இது குறித்து மாநிலங்களவை தலைவர் அலுவலக வட்டாரங்கள் கூறுகையில் ‘‘நிதியமைச்சர் அருண்ஜேட்லி மீதான விமர்சனத்தில் உரிமை மீறல் இருப்பதாக கருத இடமுள்ளது’’ எனக் கூறியுள்ளன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...