உலகிலேயே மிகவும் குறைந்த விலை கொண்ட டாப்லட் கணினி இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இவ்வாண்டு டிசம்பர் மாதத்திலிருந்து இது விற்பனைக்கு வருகிறது. 35 டாலர் (ரூ.1,750) விலை கொண்ட இந்த கம்ப்ïட்டரை சில மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். முதலில் கல்லூரிகளுக்கு மட்டுமே இந்த கம்ப்ïட்டர்கள் கிடைக்கும்.
ஒரு கம்ப்ïட்டரை உருவாக்குவதற்கு ரூ.3,000 செலவாகிறது என்றாலும், குறைந்த விலையில் அளிப்பதால் தயாரிப்பாளருக்கு ஏற்படும் இழப்பை மானியம் வழங்கி மத்திய அரசு ஈடு செய்ய உள்ளது. இந்த டாப்லட் கம்ப்ïட்டர் கூகுள் நிறுவனத்தின் ஆன்டிராயிடு தொழில்நுட்ப தளத்தில் செயல்படும். இணையதளத்திற்காக விஃபி இணைப்பு இருக்கும். இதன் ராம் 256 எம்பீ திறன் கொண்டதாகவும், எஸ்.டீ. மெமரி கார்டு 2 ஜிபீ திறன் உடையதாகவும் இருக்கும்.
எச்.பி. டச்பேடு ரக டாப்லட் கம்ப்ïட்டர் ஒன்றின் விலை 99 டாலராக உள்ளது. அமேசான் நிறுவனத்தின் கின்டில் ஃபயர் ரக டாப்லட் கணினி விலை 199 டாலராகும். சர்வதேச சந்தையில் தற்போது இவைதான் விலை மலிவான டாப்லட் கணினிகளாக உள்ளன. இந்தியாவில் பெப்பர் பிராண்டின் டாப்லட் கணினி கடந்த மாதம் 99 டாலர் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. வெஸ்புரோ இ-பேட் ரூ.7,000-த்துக்கு கிடைக்கிறது.
{qtube vid:=1SoQ0KYpjQM}
நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ... |
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.