ஆந்திராவில் பாஜக- வளர அருமையான வாய்ப்பு

"தெலுகு தேசம் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு வெளியேறியது ஆந்திராவில் பாஜக- வளர அருமையான வாய்ப்பு" –  பாஜக-வின் ஜிவிஎல் நரசிம்ஹராவ் சொல்வது முற்றிலும் உண்மை. 

 

   – சூனியாவின் ஆசியில், தெலெங்கானா – ஆந்திரா என இரண்டாக பிரிந்ததிலிருந்து ஆந்திர தலை நகரை கட்டுகிறேன் என்று எத்தனை ஆயிரம் கோடிகளை அதில் (அமராவதி) நாயுடு  செலவழித்தார் என்பதற்கு எந்த கணக்கும் இல்லை. மத்தியிலிருந்து பெறப்பட்ட பல ஆயிரம் கோடிகள், சிங்கப்பூர், ஜப்பான் என வெளிநாடுகளில் போடப்பட்ட ஒப்பந்தம், அதன் மூலம் வந்த கோடிகள் என்ன ஆனது என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம். இவருக்கு உறுதுணையாக இருந்தவர் வெங்கய்யா நாயுடு. அவரை துணை ஜனாதிபதி யாக்கியதிலிருந்து சந்திரபாபு நாயுடுவின் குரலை பாஜக-வில் பிரதிபலிக்க சரியான ஆளில்லாமல் போனது. 

நிர்மலா சீதாராமன் – அமீத் ஷா போன்றோர் ஆந்திரா வந்து செல்வதோ, பாஜக ஆந்திராவில் வளர்வதோ, நாயுடுவுக்கு பிடிக்காத விஷயங்கள்.

ஆந்திரா கவர்னர் நரசிம்ஹனை சந்திரபாபு நாயுடு மாற்ற கோரியும் மோடி செவி சாய்க்காததும், நாயுடுவின் ஊழல்களை அவரது உறவினர்களே வெளிக் கொணர்ந்ததும் நாயுடுவுக்கு கடுப்பு.

ஆந்திர – தெலெங்கானா மாநில மக்களும், ஒரு முறை மாநில கட்சியை தேர்ந்தெடுப்பது – மறு முறை தேசிய கட்சியை தேர்ந்தெடுப்பது என்றிருப்பதால், மீண்டும் ஆட்சியை தக்க வைக்க நாயுடு புது – தேசிய கூட்டணி – முகத்துடன் வர இந்த முடிவு என்கிறார்கள்.

 

"காங்கிரஸ் – பாஜக இல்லாத கட்சிகளோடு கூட்டணி", என்று  நாயுடுவை போல யோசிக்கும் குறுக்கு புத்திக்காரர், ஜிஹாதி மிஷநரி அடிவருடி – சந்திரசேகர ராவ் ஏற்கனவே  அறிவித்து நாயுடுவின் திட்டத்தை பிசுபிசுக்க வைத்திருக்கிறார். 

 

நாயுடு யாருடன் கூட்டு வைக்க முடியும்? மாநிலத்தை உடைத்த காங்கிரசோடு சேர முடியாது. கம்யூனிஸ்ட்டுகள் பிரயோஜனமில்லை. சமாஜ்வாதி – பகுஜன் போன்ற கட்சிகளுக்கு ஆந்திராவில் இடமில்லை. தனக்கு தானே குழி தோண்டியிருக்கிறார் நாயுடு.

அதே சமயம், ஆந்திர பாஜக-வுடன் கூட்டு சேர அங்கிருக்கும் இதர மாநில கட்சிகள் – ஜெகன் மோகன் ரெட்டி கட்சி உட்பட – தயார். 

சமீபத்தில், "ஆந்திராவை பிரித்து கொடுங்கள்" என்று கோரிக்கை வைத்ததோடு இவருக்கிருந்த மரியாதை முற்றிலுமாக தீர்ந்தது. 

சுயநலம்…!   

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும்