ஊழல் மற்றும் கருப்பு பணத்துக்கு எதிராக பாரதிய ஜனதா தலைவர் அத்வானி ரதயாத்திரையை இன்று தொடங்குகிறார் .இந்த யாத்திரையை பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரும்மான நிதிஷ்குமார் துவக்கி வைக்கவுள்ளார்.
பிகாரில் ஜெய்பிரகாஷ் நாராயண் பிறந்த இடமான சாப்ராவில்லிருந்து இன்று நிதிஷ்குமார் கொடி அசைத்து வைத்து துவக்கி வைக்கிறார். இந்த யாத்திரை நவம்பர் 20ம் தேதி
டெல்லியில் நிறைவு பெறுகிறது .
இந்த ரத யாத்திரை குறித்து டெல்லியில் நிருபர்களிடம் அத்வானி தெரிவித்ததாவது ,
எதிர்கட்சி என்ற முறையில் நாங்கள் எங்கள் கடமையை சரியாக செய்திருக்கிறோம். ஆனால் ஆளும்_கட்சி நாட்டை அதிருப்தி அடையச்செய்துள்ளது. ஊழல், விலைவாசி உயர்வு, கருப்பு பணம், ஆகிய பிரச்சனைகளினால் மக்கள் இந்த அரசின் மீது அதிருப்தி அடைந்திருகிறார்கள்.
ஊழலை எதிர்த்தும், சிறப்பான வளர்ச்சி, நல்ல நிர்வாகம் ஆகியவற்றை வலியுறுத்தி நான் நாடுமுழுவதும் யாத்திரையை நடத்த இருக்கிறேன்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் துவங்கும்_நேரத்தில் எனது யாத்திரை நிறைவடையும்.
நாடாளு மன்றத்தில் ஓட்டுக்கு காங்கிரஸ் பணம் கொடுத்ததை அம்பலபடுத்திய பாரதிய ஜனதா மீதே வழக்குப்போட்டு இருக்கிறார்கள். தூய்மையான நிர்வாகத்தை மத்திய அரசால் தர முடியவில்லை என்றார்.
{qtube vid:=AgPz1QQ1sPg}
கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ... |
தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ... |
இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.