நீட்தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை அதிகரித்ததால் ஏற்ப்பட்ட தட்டுப்பாடு

தமிழ்நாட்டில் நீட்தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை அதிகரித்ததால் இதரமாநிலங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. 

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போதும், தமிழ்நாட்டில் இந்த ஆண்டு நீட்தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை 31 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. எனவே, நீட்தேர்வை நடத்தும் மத்திய இடைநிலை கல்வி வாரியமான CBSE, கடந்த ஆண்டில் 149ஆக இருந்த தேர்வு மையங்களின் எண்ணிக்கையை இந்த ஆண்டு 170ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழ்நாட்டில் நீட்தேர்வு எழுதும், ஒருலட்சத்து 7 ஆயிரத்து 288 மாணவர்களுக்கு, அந்த 170 மையங்களில் இடம் ஒதுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு கூடுதலாக, 25 ஆயிரத்து 206 மாணவர்களுக்கு தமிழ்நாட்டில், தேர்வுமையங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகும், தேர்வு மையங்களுக்கான தட்டுப்பாடு எழுந்ததாகவும், இந்தநிலை, தமிழ்நாடு மட்டுமின்றி, பிற மாநிலங்களில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால், மதுரை, திருச்சி, திருநெல்வேலியைச் சேர்ந்த நீட்தேர்வெழுதும் மாணவர்களுக்கு, சென்னைக்குப் பதிலாக, அவர்களுக்கு அருகே இருக்கும் கேரள மாநிலத்தின் எர்ணாகுளத்தில் தேர்வுமையங்கள் ஒதுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழை தேர்வுமொழியாக குறிப்பிட்டுள்ள 24 ஆயிரத்து 720 மாணவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...