கர்நாடகாதேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக. 97 இடங்களைபெற்று அதிக தொகுதிகளை வென்றகட்சியாக உயர்ந்துள்ளது. மேலும் கட்சி வேட்பாளர்கள் 7 தொகுதிகளில் முன்னிலைவகித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்ததேர்தலில் பாஜக. வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு பிரதமர்மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் இன்றுமாலை அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘வளர்ச்சி என்னும் பாஜக.வின் கொள்கையை தொடர்ந்து ஆதரித்துவரும் கர்நாடகா மாநில சகோதர, சகோதரிகள் இந்ததேர்தலில் மிக அதிக இடங்களைபெற்ற கட்சியாக பா.ஜ.க.வுக்கு வாக்களித்ததற்காக நன்றி தெரிவித்துகொள்கிறேன்.
இரவு பகல்பாராமல் தேர்தல் பணியாற்றிய பாஜக. தொண்டர்களின் சிறப்பான உழைப்புக்கு தலை வணங்குகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ... |
தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ... |
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.