பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால்வரியை குறைத்து மத்திய நிதி யமைச்சர் நிர்மலா சீதாரான் அறிவித்தார். இதனால், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.50ம், டீசல் லிட்டருக்கு ரூ.7ம் விலைகுறையும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரதமர்மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மீண்டும் பெட்ரோல், டீசல்விலையை குறைத்த மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி.
கண்டும்காணாமல், கேட்டும் கேட்காமல், மக்கள் நலன்கருதாத எதிர்க்கட்சிகள், குறிப்பாக திமுக அரசு இந்தமுறையாவது குறைக்குமா? என தமிழக மக்கள் பார்த்துக் கொண்டிருக் கிறார்கள்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |