இந்தியாவை உடைக்கவிரும்பும் சக்திகளை பலப்படுத்துகிறார ராகுல்

ராகுல் காந்தி தலைமையில் செயல்படும் காங்கிரஸ்கட்சி, பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதையே கொள்கையாக கொண்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் பயங்கர வாதிகளை காட்டிலும், ராணுவ நடவடிக்கைகளில்தான் பொதுமக்கள் அதிகம் கொல்லப்பட்டதாக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான குலாம்நபி ஆசாத் பேசியிருப்பதும். காஷ்மீருக்கு விடுதலை அளிக்கவேண்டும் என்று மற்றொரு காங்கிரஸ் மூத்த தலைவா் சைபுதீன் சோஸ் பேசியிருப்பதும் கண்டிக்கத்தக்கது.

சோனியா காந்தியின் ஆசியுடன், ராகுல் காந்தியின் தலைமையில் புதிய காங்கிரஸ் உருவாகியுள்ளது. இந்தியாவை உடைக்கவிரும்பும் சக்திகளை பலப்படுத்த வேண்டும் என்பதே அக்கட்சியின் விருப்பம். 

ராகுல்காந்தி தலைவராக பொறுப்பேற்ற பிறகு, தேசம்குறித்து காங்கிரஸ் கட்சி கொண்டிருந்த பார்வையில் கடல் அளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது.

குலாம்நபி ஆசாத்தின் கருத்துக்கள் பொறுப்பற்ற வகையிலும், வெட்கக்கேடான வகையிலும் உள்ளன. இந்தியாவில் மனித உரிமைகள் மீறப்படுவதாக பாகிஸ்தான் முன்வைக்கும் குற்றறச் சாட்டுக்கு ஆசாத்தின் கருத்துக்கள் பக்கபலமாக அமையும்.

காஷ்மீரில் கொல்லப்பட்ட ராணுவ வீரரின் குடும்பத்துக்கு பாதுகாப்புதுறை அமைச்சரும், ராணுவ தளபதியும் சென்று ஆறுதல் கூறியதை குலாம் நபி ஆசாத் நாடகம் என்கிறார். இதைவிட வெட்கக்கேடான ஒருவிஷயம் இருக்க முடியுமா? 

மோடி மீது கொண்டவெறுப்பால், ராணுவ வீரா்களுக்கான மரியாதை, அவா்களது வீரம் போன்ற விஷயங்களில் காங்கிரஸ்கட்சி சமரசம் செய்துகொண்டுள்ளது. குலாம் நபி ஆசாத் மற்றும் காஷ்மீருக்கு விடுதலை அளிக்க வேண்டும் என்று கூறிய சைபுதீன்சோஸ் ஆகியோர் மீது ராகுல் காந்தி நடவடிக்கை எடுப்பாரா?

இந்த தலைவா்களை போன்றே ராகுல் காந்தியிடமும் நல்லது எதையும் எதிர்பார்க்க முடியாது. தேசத்துக்கு விரோதமாக குரல் எழுப்பிய ஜேஎன்யு பல்கலைக் கழக மாணவா்களுக்கு ஆதரவாக குரல்கொடுத்தவரும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதியில் இந்தியா துல்லியதாக்குதல் நடத்தியது குறித்து கேள்வி எழுப்பியதும் இதேராகுல் காந்திதான் .

பாஜக ஆட்சியில் அதிக அளவிலான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 2012 மற்றும் 2013 முறையே 72, 67 பயங்கரவாதிகள் மட்டுமே கொல்லப்பட்டனர், பாஜக ஆட்சிக்குவந்த 2014-இல் இது 110-ஆக அதிகரித்தது

2015-இல் 108 பயங்கரவாதிகளும், 2016-இல் 150 பேரும், 2017-இல் 217 பேரும் கொல்லப் பட்டனர். இந்த ஆண்டு மே மாதம் வரையில் 75 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

நன்றி ரவிசங்கர் பிரசாத்

மத்திய அமைச்சர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...