தி.மு.க. நடத்தும் நினைவேந்தல் கூட்டத்தில் நிதின் கட்காரி கலந்துகொள்கிறார்

மறைந்த திமுக. தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலிசெலுத்தும் வகையில் தமிழ்நாட்டின் 5 நகரங்களில் “தலைவர் கலைஞரின் புகழுக்கு வணக்கம்” என்ற தலைப்பில் நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டுவருகிறது.

திருச்சியில் கடந்த 17-ந் தேதி “கருத்துரிமை காத்தவர் கலைஞர்” என்ற தலைப்பிலும், மதுரையில் 19-ந்தேதி “முத்தமிழ்வித்தகர் கலைஞர்” என்ற தலைப்பிலும், கோவையில் கடந்த 25-ந்தேதி “மறக்க முடியுமா கலைஞரை” என்ற தலைப்பிலும் நெல்லையில் நேற்று “அரசியல் ஆளுமை கலைஞர்” என்ற தலைப்பிலும் நினைவேந்தல் கூட்டங்கள் நடந்தன.
 

அடுத்து சென்னையில் வருகிற 30-ந்தேதி “தெற்கில் உதிக்கும் சூரியன்” என்ற தலைப்பில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்ளும் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ளும் படி அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும் தி.மு.க. சார்பில் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது.

பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷாவையும் இரண்டு தி.மு.க. மூத்த தலைவர்கள் சந்தித்து அழைப்பு விடுத்தனர். அதை அமித்ஷா ஏற்றுக்கொண்டதாக . கூறி அமித்ஷா பெயருடன் அழைப்பிதழ் அச்சிடப்பட்டு வினியோகிக்கப்பட்டன.

திமுக. நடத்தும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் அமித்ஷா கலந்துகொள்கிறார் என்ற தகவல் பரவியதும், அது தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணிக்கான அச்சாரம் என்று தகவல்கள் பரவியது. அமித் ஷாவின் வருகை தமிழக அரசியல் களத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் அமித்ஷா தி.மு.க. கூட்டத்தில் கலந்துகொள்வாரா என்பதில் மாறுபட்ட தகவல்கள் வெளிவந்தன. தமிழக பாஜக. தலைவர்கள் அனைவரும் இது பற்றி கூறுகையில், “அமித்ஷா வருகை பற்றி எங்களுக்கு அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை” என்றனர்.

இதனால் அமித்ஷா வருவாரா? மாட்டாரா? என்பது உறுதியாக தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது தி.மு.க. நடத்தும் கூட்டத்துக்கு  மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கட்காரி பங்கு பெற இருப்பதை தி.மு.க. மூத்த தலைவர்கள் உறுதிப் படுத்தினார்கள்.

தமிழக பாஜக. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜனிடம் இது தொடர்பாக கேட்டபோது, “அமித் ஷா வராத பட்சத்தில் வேறு யாராவது மூத்த தலைவர் வருவார்” என்றார். அவர் மேலும் கூறுகையில், “அரசியலில் மூத்த தலைவர் ஒருவரது நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கும், அரசியல் கூட்டணிக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்றார்.

கூட்டணிபற்றி தேர்தல் சமயத்தில்தான் முடிவு செய்யப்படும் என கூறிய டாக்டர் தமிழிசை, தி.மு.க. கூட்டத்தில் பங்கேற்பதை அரசியலாக்குவதை விரும்பவில்லை என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மோடி அரசு பயங்கரவாதத்தை ஒருபோத ...

மோடி அரசு பயங்கரவாதத்தை  ஒருபோதும் சகித்துக்கொள்ளாது – அமித்ஷா இந்தியாவில் அடுத்தாண்டுக்குள் நக்சலிசம் முடிவுக்கு வரும் என்று மத்திய ...

ராமர் கோயிலுக்காக அதிகாரத்தை இ ...

ராமர் கோயிலுக்காக அதிகாரத்தை இழந்ததாலும் பிரச்சனை இல்லை – யோகி அதித்யநாத் ராமர் கோயிலுக்காக அதிகாரத்தை இழந்தாலும் பிரச்னையில்லை என்று உத்தரப் ...

ஏப்ரல் 5-ல் இலங்கைக்கு பிரதமர் ம ...

ஏப்ரல் 5-ல் இலங்கைக்கு பிரதமர் மோடி பயணம் : முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு முக்கிய ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ...

நாடகம் நடத்தும் திமுக ; மாநில பி ...

நாடகம் நடத்தும் திமுக ; மாநில பிரச்சனைகளை பேச வேண்டும் – அண்ணாமலை காட்டம் 'தொகுதி மறுசீரமைப்புக் கூட்டம் என்று தி.மு.க., நாடகம் நடத்துகிறது. ...

தி.மு.க விடை கொடுக்க வேண்டிய நேர ...

தி.மு.க விடை கொடுக்க வேண்டிய நேரம் – அண்ணாமலை ''தி.மு.க.,வினர் ஊழல் மிக்கவர்கள் மற்றும் தொலைநோக்கு பார்வை அற்றவர்கள் ...

ஊழலை மறைக்கவே மொழி பிரச்சனை – ...

ஊழலை மறைக்கவே மொழி பிரச்சனை – அமித்ஷா '' ஊழலை மறைக்கவே மொழி பிரச்னையை எழுப்புகின்றனர்,'' என ...

மருத்துவ செய்திகள்

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...