தி.மு.க. நடத்தும் நினைவேந்தல் கூட்டத்தில் நிதின் கட்காரி கலந்துகொள்கிறார்

மறைந்த திமுக. தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலிசெலுத்தும் வகையில் தமிழ்நாட்டின் 5 நகரங்களில் “தலைவர் கலைஞரின் புகழுக்கு வணக்கம்” என்ற தலைப்பில் நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டுவருகிறது.

திருச்சியில் கடந்த 17-ந் தேதி “கருத்துரிமை காத்தவர் கலைஞர்” என்ற தலைப்பிலும், மதுரையில் 19-ந்தேதி “முத்தமிழ்வித்தகர் கலைஞர்” என்ற தலைப்பிலும், கோவையில் கடந்த 25-ந்தேதி “மறக்க முடியுமா கலைஞரை” என்ற தலைப்பிலும் நெல்லையில் நேற்று “அரசியல் ஆளுமை கலைஞர்” என்ற தலைப்பிலும் நினைவேந்தல் கூட்டங்கள் நடந்தன.
 

அடுத்து சென்னையில் வருகிற 30-ந்தேதி “தெற்கில் உதிக்கும் சூரியன்” என்ற தலைப்பில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்ளும் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ளும் படி அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும் தி.மு.க. சார்பில் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது.

பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷாவையும் இரண்டு தி.மு.க. மூத்த தலைவர்கள் சந்தித்து அழைப்பு விடுத்தனர். அதை அமித்ஷா ஏற்றுக்கொண்டதாக . கூறி அமித்ஷா பெயருடன் அழைப்பிதழ் அச்சிடப்பட்டு வினியோகிக்கப்பட்டன.

திமுக. நடத்தும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் அமித்ஷா கலந்துகொள்கிறார் என்ற தகவல் பரவியதும், அது தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணிக்கான அச்சாரம் என்று தகவல்கள் பரவியது. அமித் ஷாவின் வருகை தமிழக அரசியல் களத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் அமித்ஷா தி.மு.க. கூட்டத்தில் கலந்துகொள்வாரா என்பதில் மாறுபட்ட தகவல்கள் வெளிவந்தன. தமிழக பாஜக. தலைவர்கள் அனைவரும் இது பற்றி கூறுகையில், “அமித்ஷா வருகை பற்றி எங்களுக்கு அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை” என்றனர்.

இதனால் அமித்ஷா வருவாரா? மாட்டாரா? என்பது உறுதியாக தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது தி.மு.க. நடத்தும் கூட்டத்துக்கு  மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கட்காரி பங்கு பெற இருப்பதை தி.மு.க. மூத்த தலைவர்கள் உறுதிப் படுத்தினார்கள்.

தமிழக பாஜக. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜனிடம் இது தொடர்பாக கேட்டபோது, “அமித் ஷா வராத பட்சத்தில் வேறு யாராவது மூத்த தலைவர் வருவார்” என்றார். அவர் மேலும் கூறுகையில், “அரசியலில் மூத்த தலைவர் ஒருவரது நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கும், அரசியல் கூட்டணிக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்றார்.

கூட்டணிபற்றி தேர்தல் சமயத்தில்தான் முடிவு செய்யப்படும் என கூறிய டாக்டர் தமிழிசை, தி.மு.க. கூட்டத்தில் பங்கேற்பதை அரசியலாக்குவதை விரும்பவில்லை என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கிராமப்புற இந்தியாவில் 95% நிலப் ...

கிராமப்புற இந்தியாவில் 95% நிலப்பதிவுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன நிலப் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குதல், நில உரிமையின் நிர்வாகத்தை ...

மைகவ் தேசிய விண்வெளி வினாடி வின ...

மைகவ் தேசிய விண்வெளி வினாடி வினா குடிமக்களுக்கு நல்ல வாய்ப்பு இந்திய விண்வெளி ஆய்வில் ஒரு முக்கிய சாதனையாக,சந்திரயான் -3 ...

பிரதமர் மோடி அக்டோபர் 28-அன்று கு ...

பிரதமர் மோடி அக்டோபர் 28-அன்று குஜராத் பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி அக்டோபர் 28 அன்று ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரத ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமரின் உரை அதிபர் அவர்களே, உங்கள் நட்பு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்க ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு முன் பிரதமர் மோடி வெளியிட்ட  அறிக்கை ரஷ்ய அதிபர் மேதகு விளாடிமிர் புட்டின் விடுத்த அழைப்பின் ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது – நிர்மலா சீதாராமன் 'உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக ...

மருத்துவ செய்திகள்

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...