வாரணாசியில் ரூ.550 கோடி மதிப்பீல் புதிய திட்டங்கள்

இருநாள் பயணமாக தனது பாராளுமன்ற தொகுதியான வாரணாசிவந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி பழைய காசி நகரத்துக்கு ஒருங்கிணைந்த மின்சார மேம்பாட்டுதிட்டம் பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் புதிய கண் மருத்துவமனை, பச்சிளம் குழந்தைகளை கதகதப்பாக வைக்கும் ‘இன்கு பேட்டர்’ அறை ஆகிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

 

இந்நிகழ்ச்சியில் பேசிய மோடி, வாரணாசி நகரம் கடந்த நான்காண்டுகளில் அடைந்துள்ள வளர்ச்சியை தெளிவாக காணமுடிவதாக குறிப்பிட்டார்.


இதேபோல், பழம் பெருமை வாய்ந்த காசி நகரத்தை அதன் பாரம்பரிய சிறப்பு மாறாமல் நவீனப் படுத்த வேண்டும் என்பது நமது குறிக்கோளாகும். கடந்த நான்காண்டுகளில் அந்ததிட்டமும் நிறைவேறியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் முதல் மந்திரியாக யோகி ஆதித்யாநாத் பொறுப்பேற்ற பிறகு இந்தபணிகள் எல்லாம் வேகம் கண்டுள்ளன. வாரணாசி நகரின் மேலே செல்லும் மின்கம்பிகள் எல்லாம் மாற்றப்பட்டு தரைக்கு அடியில் செல்லும் கேபிள்களாக மாற்றப் பட்டிருக்கிறது. கங்கோத்ரியில் இருந்து கங்காசாகர் வரை கங்கை ஆற்றை தூய்மைப்படுத்தும் திட்டங்களுக்கு இதுவரை 21 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளோம்.

விஸ்வநாதர் மற்றும் கங்கைத்தாயின் ஆசிகளுடன் இன்னும் ஓராண்டு நாட்டுக்காக பணி யாற்றும் வாய்ப்பு எனக்கு மிச்சம் உள்ளது. இவற்றுடன் நாட்டு மக்களான உங்களது அன்பும், வாழ்த்துகளும் இந்த நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் பணியாற்றும் உத்வேகத்தை எனக்கு அளித்துவருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ள � ...

வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ள பாஜக சொல்கிறார் ப . சிதம்பரம் இண்டி கூட்டணி பலவீனமாக இருப்பதாகக் கூறிய முன்னாள் மத்திய ...

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்� ...

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச பாதுகாப்பில் விடவேண்டும்’ அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல் ஜம்மு - காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக, ...

பாகிஸ்தான் முயற்சியை முறியடித� ...

பாகிஸ்தான் முயற்சியை முறியடித்த இந்திய வீரர்கள் பாகிஸ்தானின் முயற்சிகளை முறியடித்து இந்திய விமானப்படை மற்றும் ராணுவ ...

சந்திரயான்-5 திட்டம்: ஜப்பான் வி� ...

சந்திரயான்-5 திட்டம்: ஜப்பான் விஞ்ஞானிகளுடன் இஸ்ரோ தொழில்நுட்ப ஆலோசனை சந்தரயான் -5 திட்டத்தின் கூட்டு முயற்சிகள் குறித்து, இஸ்ரோ ...

பதற்றத்தை தணிக்க இந்தியா பாகிஸ� ...

பதற்றத்தை தணிக்க இந்தியா பாகிஸ்தான் முடிவு இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்றத்தை குறைக்கும் வகையில், ...

இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பா� ...

இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும்: ஜெய்சங்கர் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய பயங்கரவாதிகள் பட்டியல் பாகிஸ்தானிடம் உள்ளது, ...

மருத்துவ செய்திகள்

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.