சவால்களுக்கு மாணவர்களை தயார்படுத்துவதே கல்வியின் நோக்கம் – ஜெய்சங்கர்

“இந்த புதிய உலகின் சவால்களுக்கு மாணவர்களை தயார்படுத்துவதே புதிய கல்விக் கொள்கையின் நோக்கம்,” என, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

காசிக்கும், தமிழகத்துக்கும் உள்ள வரலாற்று தொடர்புகளை விளக்கும் வகையில் காசி தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சி, கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வருகிறது.

உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் நேற்று நடந்த காசி தமிழ் சங்கமம் 3.0 நிகழ்ச்சிக்கு சோமாலியா, ருவாண்டா ஜமைக்கா உள்ளிட்ட 55க்கும் மேற்பட்ட நாடுகளின் துாதர்களை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அழைத்து வந்தார். அவர்கள், காசி தமிழ் சங்கமம் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினர்.

இந்த நிகழ்ச்சியில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:

இந்தியாவிற்கும், உலகிற்கும் இடையிலான உறவில், வரலாற்று ரீதியாக நாம் முந்தைய காலங்களில் உலகிற்கு தொழில்நுட்பத்தின் ஆதாரமாக இருந்திருக்கிறோம் என்று நினைக்கிறேன்.

அதை, நாம் இன்று மீண்டும் மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அதன் ஒரு பகுதியாக தான் புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் வழியே இந்த புதிய உலகின் சவால்களுக்கு மாணவர்களை தயார்படுத்துவதே நோக்கம்.

நம் மாணவர்களின் திறன்களை வளர்ப்பதில் நாம் அதிக கவனம் செலுத்துகிறோம். புதிய கல்வி கொள்கை வாயிலாக பல புதிய தொழில் துறைகளை நாம் கொண்டு வந்துள்ளோம்.

உதாரணமாக விண்வெளி, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளை சொல்லலாம். பிரதமர் கூட தொழில்நுட்பம் மற்றும் பாரம்பரியம் என்று தான் கூறுகிறார். எனவே, பாரம்பரியம் தொழில்நுட்பத்திற்கும் உதவும், அங்குதான் நம் இந்திய அறிவு மாற்றத்தை ஏற்படுத்தும்.

அப்படித்தான் யோகா கலையை உடற்பயிற்சியாக மக்கள் அங்கீகரித்துள்ளனர். பாரம்பரிய மருத்துவமும் அப்படித்தான். அதன் மீது, இந்தியாவுக்கு வெளியே மக்கள் அவநம்பிக்கை கொண்டிருந்தனர்.

எனவே, பாரம்பரிய மருத்துவத்தின் அவசியத்தை புரிந்துகொண்டு அதை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்வது, நம் கைகளில் தான் உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...