சவால்களுக்கு மாணவர்களை தயார்படுத்துவதே கல்வியின் நோக்கம் – ஜெய்சங்கர்

“இந்த புதிய உலகின் சவால்களுக்கு மாணவர்களை தயார்படுத்துவதே புதிய கல்விக் கொள்கையின் நோக்கம்,” என, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

காசிக்கும், தமிழகத்துக்கும் உள்ள வரலாற்று தொடர்புகளை விளக்கும் வகையில் காசி தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சி, கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வருகிறது.

உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் நேற்று நடந்த காசி தமிழ் சங்கமம் 3.0 நிகழ்ச்சிக்கு சோமாலியா, ருவாண்டா ஜமைக்கா உள்ளிட்ட 55க்கும் மேற்பட்ட நாடுகளின் துாதர்களை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அழைத்து வந்தார். அவர்கள், காசி தமிழ் சங்கமம் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினர்.

இந்த நிகழ்ச்சியில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:

இந்தியாவிற்கும், உலகிற்கும் இடையிலான உறவில், வரலாற்று ரீதியாக நாம் முந்தைய காலங்களில் உலகிற்கு தொழில்நுட்பத்தின் ஆதாரமாக இருந்திருக்கிறோம் என்று நினைக்கிறேன்.

அதை, நாம் இன்று மீண்டும் மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அதன் ஒரு பகுதியாக தான் புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் வழியே இந்த புதிய உலகின் சவால்களுக்கு மாணவர்களை தயார்படுத்துவதே நோக்கம்.

நம் மாணவர்களின் திறன்களை வளர்ப்பதில் நாம் அதிக கவனம் செலுத்துகிறோம். புதிய கல்வி கொள்கை வாயிலாக பல புதிய தொழில் துறைகளை நாம் கொண்டு வந்துள்ளோம்.

உதாரணமாக விண்வெளி, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளை சொல்லலாம். பிரதமர் கூட தொழில்நுட்பம் மற்றும் பாரம்பரியம் என்று தான் கூறுகிறார். எனவே, பாரம்பரியம் தொழில்நுட்பத்திற்கும் உதவும், அங்குதான் நம் இந்திய அறிவு மாற்றத்தை ஏற்படுத்தும்.

அப்படித்தான் யோகா கலையை உடற்பயிற்சியாக மக்கள் அங்கீகரித்துள்ளனர். பாரம்பரிய மருத்துவமும் அப்படித்தான். அதன் மீது, இந்தியாவுக்கு வெளியே மக்கள் அவநம்பிக்கை கொண்டிருந்தனர்.

எனவே, பாரம்பரிய மருத்துவத்தின் அவசியத்தை புரிந்துகொண்டு அதை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்வது, நம் கைகளில் தான் உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குங்குமப்பூ விவசாயம் செய்யும் � ...

குங்குமப்பூ விவசாயம் செய்யும் இளைஞரை பாராட்டிய பிரதமர் மோடி கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி-யை அடுத்த மலவயல் ...

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்� ...

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த பச்சைக்கொடி பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ...

பிரதமர் மோடியுடன் ஆர் எஸ் எஸ் த� ...

பிரதமர் மோடியுடன் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு மிகவும் பரபரப்பான சூழ்நிலையில், பிரதமர் மோடியை, டில்லியில் உள்ள ...

பாகிஸ்தானுக்கு பதிலடி ; முப்படை ...

பாகிஸ்தானுக்கு பதிலடி ; முப்படைகளுக்கு முழு சுதந்திரம் – பிரதமர் மோடி உறுதி ல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தருவதற்கான உயர்மட்ட ...

கல்வியை நவீனபடுத்தும் மத்திய அ� ...

கல்வியை நவீனபடுத்தும் மத்திய அரசு – பிரதமர் மோடி பெருமிதம் நாட்டின் எதிர்காலத்திற்கு இளைஞர்களை தயார்படுத்த கல்வி முக்கிய பங்காற்றுகிறது. ...

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற மார ...

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற மார்க் கார்னிக்கு பிரதமர் மோடி வாழ்த்து கனடா பார்லிமென்ட்டிற்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...