நல்லாட்சி என்பது பாஜக வின் அடையாளம் – பிரதமர் மோடி பெருமிதம்

‘இன்று பல கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. நல்லாட்சி என்பது பா.ஜ.,வின் அடையாளம்’ என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளையொட்டி, மத்திய பிரதேசம் மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள கஜுராஹோ என்ற இடத்தில் பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, நினைவு நாணயம் மற்றும் தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார். நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது: கடந்த காலங்களில் காங்கிரஸ் அரசு அறிவிப்புகளை வெளியிடுவதில் நிபுணத்துவம் பெற்றதாக இருந்த போதிலும், அதன் பலன் மக்களுக்கு கிடைக்கவில்லை. பிரதமரான பிறகு, பழைய திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தேன்.

40 ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்டு, சில திட்டங்கள் ஒரு வேலை கூட நடைபெறவில்லை என்பது வியப்பளிக்கிறது.சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஒருமுறை பரிணாம வளர்ச்சியை மேற்கொள்ள வேண்டும். நாட்டில் பா.ஜ.,வுக்கு எங்கு பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததோ, அங்கெல்லாம் பழைய சாதனைகளை முறியடித்து, மக்கள் நலன் மற்றும் வளர்ச்சிப் பணிகளில் வெற்றி பெற்றுள்ளோம் என்று நம்பிக்கையுடன் கூறுகிறேன். சாமானியர்களுக்காக நாங்கள் எவ்வளவு அர்ப்பணிப்புடன் இருக்கிறோம் என்பது மக்களுக்கு தெரியும். சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்க இரவு பகலாக உழைக்கிறோம்.

கடந்த 1 வருடத்தில் வளர்ச்சி புதிய வேகம் பெற்றுள்ளது. இன்று பல கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. நல்லாட்சி என்பது பா.ஜ.,வின் அடையாளம். இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நாட்டிலும், உலகிலும் உள்ள கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பா.ஜ., அரசு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. அவருக்கும், பா.ஜ., தொண்டர்களுக்கும், மாநில மக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...