நல்லாட்சி என்பது பாஜக வின் அடையாளம் – பிரதமர் மோடி பெருமிதம்

‘இன்று பல கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. நல்லாட்சி என்பது பா.ஜ.,வின் அடையாளம்’ என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளையொட்டி, மத்திய பிரதேசம் மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள கஜுராஹோ என்ற இடத்தில் பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, நினைவு நாணயம் மற்றும் தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார். நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது: கடந்த காலங்களில் காங்கிரஸ் அரசு அறிவிப்புகளை வெளியிடுவதில் நிபுணத்துவம் பெற்றதாக இருந்த போதிலும், அதன் பலன் மக்களுக்கு கிடைக்கவில்லை. பிரதமரான பிறகு, பழைய திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தேன்.

40 ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்டு, சில திட்டங்கள் ஒரு வேலை கூட நடைபெறவில்லை என்பது வியப்பளிக்கிறது.சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஒருமுறை பரிணாம வளர்ச்சியை மேற்கொள்ள வேண்டும். நாட்டில் பா.ஜ.,வுக்கு எங்கு பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததோ, அங்கெல்லாம் பழைய சாதனைகளை முறியடித்து, மக்கள் நலன் மற்றும் வளர்ச்சிப் பணிகளில் வெற்றி பெற்றுள்ளோம் என்று நம்பிக்கையுடன் கூறுகிறேன். சாமானியர்களுக்காக நாங்கள் எவ்வளவு அர்ப்பணிப்புடன் இருக்கிறோம் என்பது மக்களுக்கு தெரியும். சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்க இரவு பகலாக உழைக்கிறோம்.

கடந்த 1 வருடத்தில் வளர்ச்சி புதிய வேகம் பெற்றுள்ளது. இன்று பல கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. நல்லாட்சி என்பது பா.ஜ.,வின் அடையாளம். இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நாட்டிலும், உலகிலும் உள்ள கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பா.ஜ., அரசு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. அவருக்கும், பா.ஜ., தொண்டர்களுக்கும், மாநில மக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மோடி – டிரம்ப் தொலை பேசி உரையா ...

மோடி – டிரம்ப் தொலை பேசி உரையாடல் பிரதமா் நரேந்திரமோடியும், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் தொலைபேசி ...

காப்பீட்டுத் துறையில் 100% அன்னிய ...

காப்பீட்டுத் துறையில் 100% அன்னிய முதலீடு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ...

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை.. பதவ ...

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை.. பதவி நீக்கம் செய்ய முடியுமா? திமுகவின் மாஸ்டர் பிளான் திருப்பரங்குன்றம் மலையில், சிக்கந்தர் தர்காவை ஒட்டியுள்ள பகுதியில் உள்ள ...

தவறு இண்டிகோவிடம் தான் உள்ளது

தவறு இண்டிகோவிடம் தான் உள்ளது தவறு இண்டிகோவிடம்தான் உள்ளது என்றும், விரைவில் நிலைமை சீராகிவிடும், ...

இந்தியாவுக்கு மோடி பிரதமராகக் ...

இந்தியாவுக்கு மோடி பிரதமராகக் கிடைத்தது அடித்த அதிர்ஷ்டமே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , பிரதமர் நரேந்திரமோடியின் ...

மருத்துவ செய்திகள்

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...