பிரதமர் மோடியை சந்தித்து 15 ஆயிரம்கோடி நிவாரணம் கோரினார்

டில்லி சென்ற முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடியை சந்தித்து, புயல்சீரமைப்பு பணிகளுக்காக ரூ.15 ஆயிரம்கோடி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாக கூறினார்.
 

 

கடந்த 16-ம் தேதி கஜா புயல் தாக்கியதை அடுத்து டெல்டா மாவட்டங்கள் கடும்சேதத்தை சந்தித்துள்ளன.ஏராளமான பொருட் சேதத்துடன் உயிர்தேசமும் ஏற்பட்டுள்ளது. அமைச்சர்கள், அதிகாரிகள் உடனான ஆலோசனை கூட்டத்துக்குப்பின் நேற்று முன்தினம் (நவ.,20) முதல்வர் நேரில்சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் சேதமதிப்பீட்டு அறிக்கையுடன், நேற்று மாலை டில்லி சென்றார். அங்கு அதிமுக. எம்.பி.க்களுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார். 

 

பிரதமர் மோடியை இன்று(நவ.,22) காலை தமிழகமுதல்வர் பழனிசாமி சந்தித்து புயல்பாதிப்பு குறித்து விளக்கி கூறினார்.பின்னர் முதல்வர் பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: கஜாபுயல் பாதிப்பு குறித்தும், சேதவிவரங்கள் குறித்தும் பிரதமரிடம் விளக்கி கூறி, கோரிக்கைமனு அளித்து உள்ளேன். சேதமடைந்த பகுதிகளை பார்வையிட உடனடியாக மத்தியகுழுவை அனுப்பி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன். விரைவில் மத்திய குழுவை அனுப்பி வைப்பதாக பிரதமர் கூறினார். நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கவேண்டும் எனவும், இடைக்கால நிவாரணமாக ரூ.1,500 கோடி கோரிக்கை வைத்துள்ளேன். இதனை வழங்குவதாக பிரதமர் கூறியுள்ளார்.
 

புயலால் 12 மாவட்டங்கள் பாதிக்கபட்டுள்ளன. 63 பேர் உயிரிழந்துள்ளனர். 12,298 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 3, 41, 870 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளன. 30 ஆயிரம் ஹெக்டேர் தென்னை மரங்கள்சேதமடைந்துள்ளன.நிஷா புயலின் போது திமுக ஆட்சியில் அளித்த நிதியைவிட தற்போது நிதி வழங்கப்பட்டுள்ளது.

 

சாலை மார்க்கமாக ஸ்டாலின் எத்தனை இடங்களில் சென்று புயல்சேதத்தை ஆய்வு செய்தார். நான் ஹெலிகாப்டரில் சென்றதால்தான் சேத விவரம் முழுமையாக தெரிந்தது. பாதிப்புகுறித்த புகைப்படங்களை எடுத்துவைத்துள்ளேன். 3 இடங்களுக்கு சென்ற ஸ்டாலின், புயல்பாதிப்பை பார்வையிட்டு, பாதியிலேயே திரும்பிவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...