யானை சிலை நிறுவிய செலவை மாயாவதி செலுத்த வேண்டும்

உ.பி.யில் முதல்வராக இருந்தபோது மாயாவதி தமது சிலைகளையும், தமது கட்சியின் சின்னமான யானை சிலைகளையும் அரசுசெலவில் வைத்ததற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் செலவான அரசுப்பணத்தை மாயாவதி திரும்பச்செலுத்த உத்தரவு பிறப்புக்கப் போவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

உ.பி.யில் மாயாவதி முதல்வராக இருந்தபோது மாநிலம் முழுவதும் தன்னுடைய சிலைகளையும், தன்கட்சியின் சின்னமான யானை சிலைகளையும் ஏராளமாக நிறுவினார். இதற்கு அப்போதே கடும் எதிர்ப்பு நிலவியது.

அரசுப்பணத்தில் சிலைவைத்துள்ளதை எதிர்த்து உ.பி.யைச் சேர்ந்த வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

சுய விளம்பரத்திற்காகவும், கட்சியை விளம்பரப்படுத்தவும் அரசுப் பணத்தை செலவிடுவதை நியாயப்படுத்த முடியாது என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். செலவழிக்கப்பட்ட அரசுப்பணம் முழுவதையும் மாயாவதி திரும்பச்செலுத்த வேண்டியிருக்கும்.

இந்தப் பிரச்னையில் இன்னும் விரிவாக அலசி ஆராயவேண்டிய நிலை உள்ளது. அதனால் இறுதி உத்தரவு ஏப்ரல் 2-ந் தேதி வழங்கப்படும் என்று நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...