அனைத்து நெடுஞ்சாலை திட்டங்களும் 3 ஆண்டுகளில் முடிக்கபடும்

அனைத்து நெடுஞ்சாலை திட்டங்களும் 3 ஆண்டுகளில் முடிக்கபடும் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின்கட்கரி உறுதியளித்துள்ளார்.

நாக்பூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியவர், “சாலைப் பணிகள் நிமித்தமாக நான் கடந்த ஆட்சியின் போதே நிறைய செய்திருக்கிறேன். இந்த முறையும் அவை தொடரும்.

அடுத்த மூன்று ஆண்டுகளில் சாலை யோரங்களில் 125 கோடி மரக்கன்றுகளை நடத் திட்டமிட்டிரு க்கிறோம். தேசத்தின் மக்கள் தொகைக்கு சமமான அளவு மரங்களை நடத் திட்டமிடப்பட்டுள்ளது.

அனைத்து நெடுஞ்சாலைத் திட்டங்களும் மூன்று ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும். இப்போது நாளொன்றுக்கு 32 கி.மீ. சாலை அமைத்தல் என்ற இலக்கு இனிநாளொன்றுக்கு 40 கி.மீ அமைக்கப்படும் என்று உயர்த்தப்படுகிறது” என்றார்.

நிதின்கட்கரிக்கு கூடுதலாக சிறு, குறு, நடுத்தர தொழில்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. அது குறித்து பேசிய அவர், “சிறு, குறு, நடுத்தர தொழில்துறைகள் வளர்ச்சி விகிதம், மற்றும் வேலை வாய்ப்புடன் நேரடி தொடர்பு கொண்டிருக்கிறது.

அதனால், பிரதமர் இத்தொழிலின் வளர்ச்சி விகிதத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என விரும்புகிறார். பிரதமரின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்யும் வகையில் நான் செயல்படுவேன்” என்றார்.

நாக்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நிதின் கட்கரி, மே 30-ல் பதவியேற்ற பின்னர் இன்று முதன் முறையாக தொகுதிக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...