அனைத்து நெடுஞ்சாலை திட்டங்களும் 3 ஆண்டுகளில் முடிக்கபடும்

அனைத்து நெடுஞ்சாலை திட்டங்களும் 3 ஆண்டுகளில் முடிக்கபடும் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின்கட்கரி உறுதியளித்துள்ளார்.

நாக்பூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியவர், “சாலைப் பணிகள் நிமித்தமாக நான் கடந்த ஆட்சியின் போதே நிறைய செய்திருக்கிறேன். இந்த முறையும் அவை தொடரும்.

அடுத்த மூன்று ஆண்டுகளில் சாலை யோரங்களில் 125 கோடி மரக்கன்றுகளை நடத் திட்டமிட்டிரு க்கிறோம். தேசத்தின் மக்கள் தொகைக்கு சமமான அளவு மரங்களை நடத் திட்டமிடப்பட்டுள்ளது.

அனைத்து நெடுஞ்சாலைத் திட்டங்களும் மூன்று ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும். இப்போது நாளொன்றுக்கு 32 கி.மீ. சாலை அமைத்தல் என்ற இலக்கு இனிநாளொன்றுக்கு 40 கி.மீ அமைக்கப்படும் என்று உயர்த்தப்படுகிறது” என்றார்.

நிதின்கட்கரிக்கு கூடுதலாக சிறு, குறு, நடுத்தர தொழில்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. அது குறித்து பேசிய அவர், “சிறு, குறு, நடுத்தர தொழில்துறைகள் வளர்ச்சி விகிதம், மற்றும் வேலை வாய்ப்புடன் நேரடி தொடர்பு கொண்டிருக்கிறது.

அதனால், பிரதமர் இத்தொழிலின் வளர்ச்சி விகிதத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என விரும்புகிறார். பிரதமரின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்யும் வகையில் நான் செயல்படுவேன்” என்றார்.

நாக்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நிதின் கட்கரி, மே 30-ல் பதவியேற்ற பின்னர் இன்று முதன் முறையாக தொகுதிக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...