வங்கம் தந்த சிங்கம் தன் 33வது வயதில் கல்கத்தா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரானவர். சுதந்திர போராட்ட வீரர்.
காங்கிரஸ் கட்சி பாரதத்தை பிளந்து பாக்கிஸ்தான் உருவாக ஆதரவளித்தது. இவரோ பாக்கிஸ்தானை பிளந்து பஞ்சாப்பும்வங்கமும் பாரதத்துடன் இருக்கச்செய்தார்.
நேரு தலைமையிலான இடைக்கால மந்திரி சபையில் தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து வழங்கப்பட்டதை எதிர்த்தார்.
ஒரு தேசத்திற்குள் இரண்டுகொடி இரண்டு சட்டமா? கூடாது கூடாது என்றார். காஷ்மீர் பாரதத்தின் பிரிக்கமுடியாத அங்கம் என்பதை உலகுக்குணர்த்திட போராடினார். நேரு – லியாகத் ஒப்பந்தத்தை எதிர்த்தார்.
பாராளுமன்ற விவாதத்தின் போது உன்னை ஒழித்துவிடுவேன் என்ற பிரதமர் நேருவைப்பார்த்து ஒழிப்பேன் என்ற உங்கள் எண்ணத்தை ஒழிப்பேன் என்று பதிலுரைத்த அஞ்சாநெஞ்சன்.
கட்டுக்கடங்காத காங்கிரஸ்க்கு கடிவாளமிட ஜனசங்கம் கண்டார்.
காஷ்மீரின் சிறப்புசட்டத்தை எதிர்த்து பெர்மிட் இன்றி காஷ்மீருக்குள் செல்வேன் என்று அறிவித்து காஷ்மீருக்குள் சிங்கமென சென்ற தேசியத்தலைவன்.
அந்தோ! நேரு-ஷேக் அப்துல்லா கூட்டு சதியால் அநியாயமாக மர்மமான முறையில் கொல்லப்பட்டார். இதுவரை அவர் எப்படி கொல்லப்பட்டார் என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
காஷ்மீர் காக்க பலிதானமான முதல் அரசியல் தலைவர். காங்கிரஸ் நடத்திய அப்பட்டமான அரசியல் படுகொலை.
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ... |
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |