அரசியலமைப்பு சட்டத்தின் 75-வது சிறப்பு விவாதம்

அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டு விழா குறித்த சிறப்பு விவாதம் லோக்சபாவில் நேற்று துவங்கியது. விவாதத்தை துவக்கி வைத்து, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

தற்போதைய அமிர்த காலத்தில் அரசியலமைப்புச் சட்டத்தின் 75ம் ஆண்டு விழாவை கொண்டாடும் நாம் எல்லாம் அதிர்ஷ்டசாலிகள்.

ஏதோ ஆங்கிலேயேர்களிடமிருந்து கடன் வாங்கி நம் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியதுபோல சிலர் பேசுவது தவறு. நம் சுதந்திர போராட்டம் மற்றும் நமது கலாசார அம்சங்களையும் உள்ளடக்கி தயாரிக்கப்பட்டதுதான் இந்த புத்தகம்.

அரசியல் நிர்ணய சபையில் மதன் மோகன் மாளவியா, சர்தார் படேல், பகத்சிங், வீர் சாவர்க்கர் ஆகியோர் தங்களது பங்களிப்பை செய்துள்ளனர்.

டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி உள்ளிட்ட பலரது பங்களிப்பும் இந்த அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது. வலிமையான மத்திய அரசும், ஜனநாயக ரீதியிலான அரசியல் அமைப்பு சட்டமும் அமைய வேண்டும் என்றும் ஷியாமா பிரசாத் முகர்ஜி விரும்பினார். ஆனால், அரசியலமைப்பு சட்டத்தை, ஒரு கட்சி, தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளப் பார்த்தது.

இந்த புத்தகம் ஒன்றும், ஏதோ ஒரு கட்சி, நமக்கு தந்த பரிசு அல்ல. இது இந்திய மக்கள் அனைவருக்கும் சொந்தமானது. இதன் வாயிலாகத்தான், ஒரு ஏழைக்குடும்பத்தில் இருந்து வந்தவர் பிரதமராகவும், ஜனாதிபதியாகவும் ஆக முடிந்தது.

அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரிஜினல் புத்தகத்தில் அடிப்படை உரிமைகள் பற்றி விவரிக்கும் பக்கங்களில் ராமர், சீதை, லட்சுமணன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அரசியலமைப்பு சட்டப் புத்தகத்தை தங்களுடைய பாக்கெட்டில் வைத்துக்கொண்டு சிலர் திரிகின்றனர். சிறிய வயதிலிருந்தே அவர்களுக்கு இந்த பழக்கம்.

காரணம், பல தலைமுறைகளாக அரசமைப்புச் சட்டம், அவர்களது குடும்பத்தினுடைய பாக்கெட்டுகளில் இருந்துள்ளது. தற்போது தான் அதை பா.ஜ., தன் நெற்றியில் வைத்து வணங்குகிறது. அதிகாரமா, அரசமைப்புச் சட்டமா என்றால், எப்போதுமே அதிகாரத்தையே காங்கிரஸ் தேர்வு செய்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சிறுபான்மையினருக்கு மிகப்பெரி ...

சிறுபான்மையினருக்கு மிகப்பெரிய பாதுகாப்பு: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நம் நாடு ஒரு மதச்சார்பற்ற நாடு, இங்கு சிறுபான்மையினர் ...

ஜூலை 23ம் தேதி பிரிட்டன் செல்கிற ...

ஜூலை 23ம் தேதி பிரிட்டன் செல்கிறார் மோடி; வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு ஜூலை 23ம் தேதி பிரதமர் மோடி பிரிட்டன் செல்கிறார். ...

பிற்போக்குத்தனமான பழக்க வழக்க ...

பிற்போக்குத்தனமான பழக்க வழக்கங்களில் இருந்து பெண்களை விடுவிக்க வேண்டும்: மோகன் பகவத் பேச்சு நாட்டின்வளர்ச்சிக்கு பெண்கள்முக்கியமானவர்கள். அவர்களை பிற்போக்குத்தனமானபழக்கவழக்கங்களில் இருந்து விடுவிக்க வேண்டும் ...

டி.ஆர்.எப். மீதான அமெரிக்க நடவடி ...

டி.ஆர்.எப். மீதான அமெரிக்க நடவடிக்கைக்கு இந்தியா பாராட்டு; வலுவான ஒத்துழைப்பு என வரவேற்பு டி.ஆர்.எப்.,க்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை, இரு நாடுகளின் பயங்கரவாத ...

மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்க ...

மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்கு திரிணமுல் காங்., தடை: பிரதமர் மோடி பேச்சு மேற்கு வங்க மாநிலத்தின் வளர்ச்சிக்கு முதல்வர் மம்தா பானர்ஜி ...

சுதந்திரப் போராட்ட வீரர் மங்கள ...

சுதந்திரப் போராட்ட வீரர் மங்கள் பாண்டேயின் பிறந்தநாளில் பிரதமர் மரியாதை சுதந்திரப் போராட்ட வீரர் மங்கள் பாண்டேயின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு ...

மருத்துவ செய்திகள்

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...