அரசியலமைப்பு சட்டத்தின் 75-வது சிறப்பு விவாதம்

அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டு விழா குறித்த சிறப்பு விவாதம் லோக்சபாவில் நேற்று துவங்கியது. விவாதத்தை துவக்கி வைத்து, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

தற்போதைய அமிர்த காலத்தில் அரசியலமைப்புச் சட்டத்தின் 75ம் ஆண்டு விழாவை கொண்டாடும் நாம் எல்லாம் அதிர்ஷ்டசாலிகள்.

ஏதோ ஆங்கிலேயேர்களிடமிருந்து கடன் வாங்கி நம் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியதுபோல சிலர் பேசுவது தவறு. நம் சுதந்திர போராட்டம் மற்றும் நமது கலாசார அம்சங்களையும் உள்ளடக்கி தயாரிக்கப்பட்டதுதான் இந்த புத்தகம்.

அரசியல் நிர்ணய சபையில் மதன் மோகன் மாளவியா, சர்தார் படேல், பகத்சிங், வீர் சாவர்க்கர் ஆகியோர் தங்களது பங்களிப்பை செய்துள்ளனர்.

டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி உள்ளிட்ட பலரது பங்களிப்பும் இந்த அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது. வலிமையான மத்திய அரசும், ஜனநாயக ரீதியிலான அரசியல் அமைப்பு சட்டமும் அமைய வேண்டும் என்றும் ஷியாமா பிரசாத் முகர்ஜி விரும்பினார். ஆனால், அரசியலமைப்பு சட்டத்தை, ஒரு கட்சி, தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளப் பார்த்தது.

இந்த புத்தகம் ஒன்றும், ஏதோ ஒரு கட்சி, நமக்கு தந்த பரிசு அல்ல. இது இந்திய மக்கள் அனைவருக்கும் சொந்தமானது. இதன் வாயிலாகத்தான், ஒரு ஏழைக்குடும்பத்தில் இருந்து வந்தவர் பிரதமராகவும், ஜனாதிபதியாகவும் ஆக முடிந்தது.

அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரிஜினல் புத்தகத்தில் அடிப்படை உரிமைகள் பற்றி விவரிக்கும் பக்கங்களில் ராமர், சீதை, லட்சுமணன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அரசியலமைப்பு சட்டப் புத்தகத்தை தங்களுடைய பாக்கெட்டில் வைத்துக்கொண்டு சிலர் திரிகின்றனர். சிறிய வயதிலிருந்தே அவர்களுக்கு இந்த பழக்கம்.

காரணம், பல தலைமுறைகளாக அரசமைப்புச் சட்டம், அவர்களது குடும்பத்தினுடைய பாக்கெட்டுகளில் இருந்துள்ளது. தற்போது தான் அதை பா.ஜ., தன் நெற்றியில் வைத்து வணங்குகிறது. அதிகாரமா, அரசமைப்புச் சட்டமா என்றால், எப்போதுமே அதிகாரத்தையே காங்கிரஸ் தேர்வு செய்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி க ...

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி கற்கும் வாய்ப்பை ஏன் தடுக்கிறீர்கள் – அண்ணாமலை கேள்வி அரசுப் பள்ளிகளில் இலவசமாக மூன்று மொழிகள் கற்கும் வாய்ப்பை ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அ ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய தஸ்ய கல்வி கொள்கை – மத்திய கல்வி  அமைச்சர் 'புதிய கல்விக் கொள்கை தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அனைத்து ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவோம் – பிரதமர் மோடி அறிவுரை டில்லியில் இன்று (பிப்.,17) அதிகாலை நில அதிர்வு உணரப்பட்ட ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ 9 லட்சம் கோடி ஏலக்காய் எட்டும் – பிரதமர் மோடி உறுதி 'ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ.9 ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் R ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் – ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் 'யாரையும் புண்படுத்தும் விஷயங்களை நாங்கள் செய்ய மாட்டோம்' என ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப்பது மகிழ்ச்சி – பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தமிழ்ச் சங்கமம் நடப்பது ...

மருத்துவ செய்திகள்

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...