அயோத்தியில் ராமருக்கு 251 மீட்டர் உயரத்தில் சிலை

அயோத்தியில் ராமருக்கு 251 மீட்டர் உயரத்தில் சிலைவைக்கப்படும் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். இதுதொடர்பாக அம்மாநில தலைநகரில் திங்கள்கிழமை நடைபெற்ற மாநில அரசின் உயர்மட்டக்குழுக் கூட்டத்துக்குப் பின்னர் கூறியதாவது:

அயோத்தியில் சரயு நதிக் கரையின் அருகில் 100 ஹெக்டேர் நிலப்பரப்பில் 251 மீட்டர் உயரத்தில் ராமர்சிலை அமைக்கப்படும். குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் சிலையைவிட இதுவே உலகின் உயரமான சிலையாக அமைய உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. அதனுடன் அயோத்தியின் கட்டமைப்புமேம்பாடு தொடர்பான திட்டங்களும் தொடங்கப்பட உள்ளன.

மேலும் இங்கு நூலகம், வாகன நிறுத்துமிடம், வணிகக்கூடங்கள் உடன் கூடிய ராமர் தொடர்பான டிஜிட்டல் அருங்காட்சியகம் அமைக்கவும் முடிவெடுத்துள்ளோம். இதற்கான தொழில்நுட்ப உதவிகளுக்கு குஜராத் அரசுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தப் படுகிறது.

சிலை அமைக்கும் இடம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட முக்கிய அடிப்படை நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக ஐஐடி கான்பூர் மற்றும் நாக்பூரைச்சேர்ந்த தேசிய பசுமை பொறியியல் ஆய்வக அமைப்பின் உதவிகளை நாடியுள்ளோம் என்று தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...