ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்புஅந்தஸ்து அளிக்கும் 35-ஏ சட்டப் பிரிவு விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரியநேரத்தில் முடிவு எடுப்பார். இதில் எங்கள்  நிலைப்பாடு மிகவும் தெளிவு. அதேநேரத்தில், அந்த விவகாரம் தொடர்பாக கட்சியால் எந்தமுடிவும் எடுக்க இயலாது. அதுகுறித்து பிரதமரும், அவர் தலைமையிலான மத்திய அரசும்தான் முடிவுசெய்யும்.

ஆனால் 35ஏ சட்டப்பிரிவு விவகாரத்தில் என்னால் உறுதியளிக்க முடியும். அது தொடர்பாக மத்திய அரசு எந்த முடிவு எடுத்தாலும், மாநில அரசின் நலனை அடிப்படையாக கொண்டே எடுக்கப்படும்.
ஜம்மு-காஷ்மீரைச்சேர்ந்த அரசியல் கட்சிகள் தங்களது செல்வாக்கை தக்க வைத்துக் கொள்வதற்கு, அந்தமாநிலத்தில் நிகழும் சம்பவங்களுடன் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளை தொடர்புப் படுத்தி பீதியை கிளப்பி விடுகின்றன. தங்களது அரசியல் நலன்களுக்காக இதை அக்கட்சிகள் செய்கின்றன. பாதுகாப்பு காரணங்களுக்காக காஷ்மீருக்கு பாதுகாப்புப்படைகளை அனுப்புவதும், அங்கிருக்கும் பாதுகாப்புப் படையினரை வெளியேற்றுவதும் இயல்பான ஒன்றுதான்.

சமூகத்தில் உள்ள அனைத்துப் பிரிவு மக்களின்வளர்ச்சிக்கும் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான், முத்தலாக் தடை மசோதாவை நாடாளுமன்றத்தில் மோடி அரசு நிறைவேற்றியுள்ளது. ஹிந்துசட்டத்தில் சிறார் திருமணத்துக்கு தடை விதித்தது போல, முஸ்லிம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கு முத்தலாக் தடைமசோதாவும் முக்கியமான நடவடிக்கையாகும்.

முத்தலாக் தடை மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் சிலர் நேரடியாக ஆதரவு அளித்தனர். சிலர் வாக்கெடுப்பை புறக்கணிப்புசெய்து, மறைமுகமாக ஆதரவுதந்தனர். இந்த ஆதரவுக்காக அவர்களுக்கு பாஜகவின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ் தெரிவித்தார் ஜம்மு-காஷ்மீர் மாநிலத் தலைநகர் ஸ்ரீநகரில் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...